Quantcast
Channel: சுரேகா
Viewing all 180 articles
Browse latest View live

கந்தக சாமி!

$
0
0


அய்யா..

ஏம்பேரு கந்தக சாமி!
பொறந்த எடம் பூமிதாஞ் சாமி!
நான் வானத்தில் இல்லாத சாமி
ஆனா வாணம் செய்யுற சாமி!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு
நல்லகாலம் பொறக்குமுன்னு
மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா
மக்கிக்கெடந்தேன் சாமி!

என்னயத்தேடிவந்து
எக்குத்தப்பா நோண்டித்தந்து
எதுக்காவது பயன்படுவேன்னு
எப்படியோ கண்டுக்கிட்டாங்க.!

மொதல்ல நாம்பாட்டுக்கும்
மொறயாத்தான் இருந்தேன்.
பொறவியிலேயே நமக்கு
கோபம் கொஞ்சம் அதிகம் சாமி!
அதப்போய் மறந்துப்புட்டு
அடக்கிவச்சு அடக்கிவச்சு
அழுத்தமா மூடிவச்சு
ஒருநாள் வெடிக்கவச்சு
ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க!

நானும் சும்மா இல்ல..
நாலஞ்சு பயலுகளை நயமா
நரகத்துக்கனுப்பிட்டு..

அதெப்புடி நரகம் னு
அசதியா கேக்குறீகளா?
என்னய தூக்கிப்போட்டு
எகனை மொகனையா
வெளயாண்டவன்
எப்புடி சாமி சொர்க்கம் போவான்?

நல்லதே நடக்காதான்னு
கலங்கிப்போய் கெடந்தப்பதான்
பளபளப்பா எரிய வச்சு
பட்டாசா மாத்தி என்னை
பார்புகழ வச்சாங்க.!

சிவகாசிப்பக்கம்
அந்த சின்னப்புள்ளைங்க
என்னைத்தொட்டு
வேலைபாத்து
அவுக தாத்தா பட்ட கடன
தடுமாறி அடச்சாங்க!

அதுல ஒரு கொடுமை சாமி!
ஏங்கொணம் எனக்கே பிடிக்காது.
மனுசப்பய மாதிரியே
எங்க இருக்கோம்னு தெரியாம
ஏறிக்குதிச்சுப்புடுவேன்.
அப்புடித்தான் செலபேர
அழிக்கவேண்டியதா போச்சு!

எல்லாப்பயலுக்குள்ளும்
எங்கேயோ நான் இருக்கேன்
கோபம் சேமிக்காம
கொதிச்செழுந்து வர்றவனும்
கோபத்துக்கே பொறந்த நானும்
கிட்டத்தட்ட ஒண்ணுதான்!

நல்லவன் ஒருத்தன
நசுக்க நெனக்கிறவன்
ஒருத்தன குறிவச்சு
ஒரு கூட்டம் கொல்லுறவன்
அத்தன பேருந்தான்
என்னோட மொதலாளி!
ஆனாலும் பலதடவை
அவனுக்கே நான் கொலையாளி!

நாட்டு வெடிகுண்டா
நெறய நாள் இருந்திருக்கேன்.!
நக்ஸலைட் பொக்கிஷமா
நாந்தானே எப்பவுமே!

சீனாக்காரன் என் சித்தப்பா
மொறவேணும்
ஆனா இந்த அமெரிக்கா.?
அண்ணன் மொற வேணும்.!
என்னய விட மோசமா
இடம் பொருள் பாக்காம
எதுத்தவன அடிக்கும் பய!

இப்பல்லாம் நமக்கு
வயசாகிப்போச்சு சாமி!
இளந்தாரிப்பயலுக
பலபேரு வந்துட்டாய்ங்க!

டெட்டனேட்டர் பூதம்கிறான்
ஆர் டி எக்ஸ் ங்குறான்!
பாஸ்பரஸ் பாமுங்குறான்!
பெட்ரோல் வெடிகுண்டுங்குறான்!

டைனமைட்டுன்னு ஒரு
சாத்தான செஞ்சவரு
தப்பால்ல போயிருச்சுன்னு
நோபல் பரிசு செஞ்சு
நல்லபேர வாங்கிக்கிட்டாராம்.!

என்னய கண்டபய
என்ன புண்ணியம் செஞ்சாலும்
என் பாவம் கழுவ
இன்னும் எவனும் பொறக்கல !

ஆனாலும் நாந்தான் சாமி
அத்தனைக்கும் மூத்த சாமி!
ஏன்? னு கேளு சாமி
எனக்கப்புறம் இங்க
எத்தனைபேர் வந்தாலும்
மொதல்ல வெடிச்சது
நாந்தான் சாமி!

இருந்தாலும் எனக்கு
மனசு கொதிக்குது சாமி!
எத்தனை பேரை
கொன்னுருப்பேன்!
எத்தன நிம்மதி
தின்னுருப்பேன்!
இதெல்லாம் வேணாம்னு
இப்பவே முடிவெடுத்து
என்னய மறுபடியும்
எடுத்த எடத்துலயே
புதைங்க சாமி!

அப்படிச்செய்யலைன்னா
அதுவரைக்கும்...

ஆக்கலுக்கு யாருன்னு
அடிச்சுக்குங்க சாமி!

காத்தலைப்பத்தி நீங்களே
கவலைப்படல சாமி!

அழிக்கறதுக்கு
நமக்குத்தான்
ஆணை இருக்கு சாமி!


அதுனால இங்கு நான்
கடவுள் வரிசையிலே...

கந்தகசாமி!


ஒரு நெருங்கிய பிரபலத்தின் விருப்பத்தின் பெயரில் மீண்டும்.. 


 (   பதிவெழுத நேரமில்லைன்னா சும்மா இருக்கலாமுல்ல.. மீள்பதிவு...!! ஹூம் ...இது ஒரு பொழைப்பு!?   - என்று தங்கமணி சொல்லலை!  )


நெஞ்சுரமிருந்தால், லஞ்சம், பஞ்சாகும்!

$
0
0




                                      



        

 ’அன்புடன் கிரண்பேடி’ நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நான் இயக்கியபோது அறிமுகமான நண்பர் ஆண்ட்ரூ தனூஜ் குமார்.! ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். அவரது CHIC CONSULTANCY என்ற நிறுவனம்தான் அந்த கிரண்பேடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உண்மையில் நாட்டில் ஊழல் குறையவேண்டுமென்றால், மக்களின் தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரவேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்ட மனிதர்.! ஒத்த கருத்துடையவர்கள் நாங்கள் என்பதால், மிகவும் எளிதாக ஒட்டிக்கொண்டோம். மிக அருமையாக கிதார் வாசிப்பார்.(என் கிதார் குரு! J )  கடந்த கிறிஸ்துமஸின் பொழுது, எங்கள் வீட்டுக்கு ஒரு அற்புதமான நண்பர்கள் குழாத்தோடு வந்து, கீதங்கள் இசைத்துச் சென்றார். நேர்மை பற்றி பேசிக்கொண்டிராமல், செயலில் காட்டும் நல்ல நண்பர்.! கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.



      அவர் புதிதாக ஆரம்பித்த தனது நிறுவனத்துக்காக TIN எண் வாங்குவதற்காக, ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அலுவலகம் சென்றிருக்கிறார். உண்மையில் அந்த வேலைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால், அங்கிருந்த துணை வணிகவரி ஆணையர் ஜெயலட்சுமி மேலும் 5000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

இவர், அதெல்லாம் எங்க கம்பெனியில் தர வழியில்லை. அரசாங்கம் என்ன தொகை கட்டச்சொல்லியிருக்கோ அதான் கட்டிட்டேனே என்று பொறுமையாக பதில் சொல்ல,



உடனே, இவர் விண்ணப்பத்தைப்  பார்த்துவிட்டு இது நொட்டை, இது நொள்ளை என்று குறை சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் விடாக்கண்டராய் நொட்டை , நொள்ளையெல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டும் சென்றிருக்கிறார். அந்த பெண்மணி நக்கலாக..



’ஏன் சார்..! படிச்சிருக்கேங்கிறீங்க…! இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்ல..



’விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, பணம் கட்டறதுதானே ஃபார்மாலிட்டி! அதைத்தான் செஞ்சுட்டேனே’?… என,



’உங்களோட பெரிய தொந்தரவா(!) போச்சு! அது தவிர, தரவேண்டிய அமவுண்ட் கொண்டு வந்தீங்களா? சரி தொலையுது..உங்களுக்காக(?) ஆயிரம் குறைச்சுக்கிறேன். நாலாயிரமா தாங்க!’



’அந்த அமவுண்ட்டுக்கு ரசீது குடுப்பீங்கன்னா நான் தரேன் மேடம்..!’



’யோவ்! அதெல்லாம் தரமுடியாது.. ! நீங்க எப்படி டின் நம்பர் வாங்குறீங்கன்னு பாக்குறேன் என்று வம்பாகப் பேசியிருக்கிறார்



இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறை பணம் கேட்டது முதல், நொட்டை சொன்னது வரை ஆண்ட்ரூ தன் மொபைல் போனில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவாக எடுத்துவிட்டார்.



அதை எடுத்துக்கொண்டு அன்றே லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி, விபரம் சொல்ல, அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு, புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் செல்பேசியில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி பேச ஆரம்பித்து, ஸ்பீக்கர் போனில் போட்டு மொத்தத்தையும் போட்டு வாங்கி, மேலும் அந்த அதிகாரிகளில் ஒருவரே, ஆண்ட்ரூவின் ஆடிட்டர் போலப் பேசியிருக்கிறார்.



’என்ன சார்! உங்க க்ளையண்ட்டுக்கு எந்த விபரமும் தெரியாதா? கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுங்க சார்! நாளைக்கு வந்து பணத்தைக் குடுத்துட்டு வேலையை முடிச்சுக்குங்க சார்!’ என்று அந்த பெண்ணும் அதிகாரமாகப் பேசிவிட…முதல் ஆதாரம் சிக்கியது.!



பற்றிக்கொண்டது பரபரப்பு!



அடுத்தநாள், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆண்ட்ரூவிடம் ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று ஒத்திகையும் பார்க்க வைத்து, கல்வித்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகளை சாட்சியத்துக்கு தயார் செய்து, அதில் ஒருவரை அவர் கூடவே அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே வந்துவிட்டனர்.



அந்த அம்மாவின் டேபிளுக்கு ஆண்ட்ரூ செல்கிறார். கூட வந்திருப்பவரைக் காட்டி,



இவர் யாரு? என்று அந்தப் பெண்மணி கேட்க,



எங்க அக்கவுண்ட்டட் மேடம்.! இனிமே கமர்ஷியல் டாக்ஸ் மேட்டரெல்லாம் இவர்தான் பாக்கப்போறாரு..!



ஓஹோ..!, சரி..நம்ப மேட்டர் என்னாச்சு?



ஸாரி மேடம்..! எனக்கு உங்க ஃபார்மாலிட்டி தெரியலை ! இப்ப நீங்க சொன்ன நாலாயிரம் கொண்டுவந்திருக்கேன்.



ஸ்…ஏன் சத்தமா பேசுறீங்க..? ஓக்கே. அதை அப்படியே டேபிள் மேல் வையுங்க!



இவர் வைக்க, அந்த பணத்தின் மீது தனது கால்குலேட்டரை வைக்கிறார்.



எப்ப மேடம் என் டின் நம்பர் கிடைக்கும்?



செக்‌ஷன் க்ளார்க் இன்னிக்கு லீவு! நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!



சரி மேடம் என்று சொல்லிக்கொண்டே , அந்த அம்மா, பணத்தை கையால் தொடவில்லையே என்று நினைத்துக்கொண்டே, கீழே நின்றுகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போன் செய்ய… அவர்கள் மாடியேறி தபதபவென வந்துவிடுகிறார்கள்.



மூத்த அதிகாரி..



மேடம்.. நாங்க லஞ்ச ஒழிப்புத் துறைலேருந்து வரோம்..! மிஸ்டர் ஆண்ட்ரூகிட்ட TIN நம்பர் தர்றதுக்காக, லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம்.’



எது..? நான் எப்ப லஞ்சம் வாங்கினேன். அவர்தான் பணத்தை என் டேபிள் மேல வச்சாரு! என்று அந்த அம்மா பதற..



அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..! நீங்க வக்கச்சொன்னீங்க! வச்சாரு! அப்புறம் கால்குலேட்டரை எடுத்து ஏன் அதுக்கு மேல வச்சீங்க! என்று ஆண்ட்ரூவுடன் வந்த சாட்சிய அதிகாரி சொன்னபிறகுதான்…தான் வலையில் சிக்கிக்கொண்டது உறைத்திருக்கிறது அந்த லஞ்சப் பெருச்சாளிக்கு!



பின்னர்…ஆண்ட்ரூவைப் பார்த்து..ஒரேயடியாய் அழுது..அரற்றி..



என்ன சார். இப்படி பண்ணிட்டீங்க! அய்யய்யோ அய்யய்யோ..! என் மரியாதை போச்சே..மானம் போச்சே என்று அலறிக்கொண்டே போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார். அன்றே, நீதிமன்ற உத்தரவுப்படி புழலில் அடைக்கப்பட்டார்.



ஆண்ட்ரூவின் TIN எண் தானாக அடுத்த நாள் கடிதத்தில் வந்து சேர்ந்துவிட்டது. வெறும் ஐநூறு ரூபாய் செலவில்..!!

         
     இதில்..பணத்தை விட்டுவிடுவோம். ஏதோ ஒருமுறை நுழைவுத்தேர்வு எழுதி ஒரு அரசு நாற்காலி கிடைத்துவிட்டது என்பதற்காக ஆண், பெண் பேதமின்றி ஆட்டம்போடும் இதுபோன்ற சொறிநாய்களிடம், நம் படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றையெல்லாம் அடகு வைக்கவேண்டுமா என்று ஒரு நிமிடம் யோசித்தால், லஞ்சம் கொடுக்க மனது வராது.  அப்படிக் கொடுத்துப் பழக்கியதால்தான். இவர்கள் ஆட்டத்துக்குத் துணைபோக அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கெடுத்து நாட்டையே சூறையாடுகிறார்கள். பந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்!



   எல்லாவற்றையும் விடுவோம். அரசு அலுவலகத்தில், அந்த வேலைக்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு, லஞ்சமில்லாமல்- முடிந்தால் அந்த ஆளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டு-  வேலையை முடித்துப்பாருங்கள். அன்றிரவு தூக்கத்தின் நிம்மதிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.






டிஸ்கி:
                                            





      நண்பர் ஆண்ட்ரூவுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பினால் aliceandy@gmail.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நல்ல உள்ளங்கள் துணைக்கு இருப்பது அவரை பயமின்றி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

தொடர்பான செய்திகள் :

லஞ்ச ஒழிப்பில் உதவி தேவையென்றால் கேட்டால் கிடைக்கும் அமைப்பை kettaalkidaikkum@gmail.comஎன்ற மின்னஞ்சலில் அணுகினால், ஆட்டம் களைகட்டும்.!




ட்விட்டுரை # 2

$
0
0
                           






எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு

அக்கா..வீட்டிலியேஇருந்தாவெளிச்சொத்துக்களையாருபாத்துப்பா? _அப்பசரி!! குடும்பத்தோடவெளிலபோய்பாதுகாத்துருங்க! - அப்பமக்கள்? ஹெஹெஹெ!!


சொத்துக்குவிப்புவழக்கில், அப்ரூவரானாஅல்வாக்கடைவச்சுத்தரேன்னாருவூட்டுக்காரரு...நான்வரேன்க்கா!! #யாருடீஇவுங்களைவெளிலஅனுப்பிச்சது?


முல்லைப்பெரியாறைவிட்டுட்டுமன்னைப்பெரியோரைநினைக்கும்இந்ததமிழ்க்கூட்டம்..!! கிடைத்தகேப்பில்கட்டையப்போடுடேசாண்டி!!


நானேஎப்படிடாவெளிலபோலாம்... இதுவரைக்கும்அமுக்கினதைஅனுபவிக்கலாம்னுநெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானேகழட்டிவுட்டுட்டா! #யாரு?யாரோ!


காந்தித்தனம்நன்றுதான்எதிராளிஆங்கிலேயனாகஇருக்கும்பட்சத்தில்..! இந்தியனென்றால்..டையர்த்தனம்தான்நல்லது..#ச்சுட்டேபுடணும்!


பணக்காரபையனைகாதலிக்கும், அழகானபெண்ணைகாதலனுக்கும்அறிமுகப்படுத்துங்கள்!அப்புறம்என்ன ? Break Up தான்! ஸ்வீட்எடுகொண்டாடு #Breakup Idea


அம்மாபிடிக்குமா? அப்பாபிடிக்குமான்னுகேட்டால்...ரெண்டுபேரையுமேபிடிக்காதுமுகத்துக்குநேராகச்சொல்லும்நேர்மையானபாப்பாதான்நாளைய VIP


இனிஒருவிதிசெய்யப்புறப்படும்மருத்துவவிஞ்ஞானியின்வேலை. இனிஒருவியாதிசெய்வது!! - இதுஎன் 9ம்வகுப்பில்எழுதியது!!


இதுஇல்லாமஇதுபண்ணினாலோ, ‘இதுபண்ணாமஇதுபோட்டுக்கிட்டாலோஇதுவரும்..ஜாக்கிரதை!! #HIV


நீங்கபாட்டுக்குமலைக்குப்போறேங்கிறீங்க? நாங்கஇங்கஒருபெரியபிரச்னைக்குபிச்சிக்கிட்டிருக்கோமேமேdam!!


30 நாளில் 3000 கோடிசெலவழிக்கணுமாஅருணாச்சலம்!! # டேய்அண்ணனைபஸ்ஸில்ஊரைச்சுத்திக்காட்டி , பால்வாங்கிக்குடு!


ஊழலைஒழிக்கமத்தியஅரசுஉறுதிபூண்டுள்ளது - சோனியா # ஏன்இந்ததிடீர்த்தற்கொலைமுடிவு?


அணுஉலைவேணுங்கிறஅப்பாடக்கரெல்லாம்அங்கயேஉக்காந்துக்கவேண்டியதுதானே? சொல்லிட்டுடெல்லிப்பக்கம்ஓடிர்றானுங்க! #நீங்கஇருந்துகாட்டுங்க!



பள்ளிஇருக்கும்நாளில் 7:30 மணிக்குஎழுப்பபெரியபோரேநடக்கும்..! லீவுன்னுசொன்னவுடனேபயபுள்ளை 6 மணிக்கெல்லாம்எந்திருச்சுஆட்டம்.!.#சேட்டை மகன்.


எதுஎப்படியோ? இன்னிக்குஒருசொந்தக்காரப்பையனுக்குகல்யாணம்பண்ணிவச்சுஅவன்வாழ்க்கையைசீரழிச்சாச்சு! அப்பாடா!


மயக்கம்என்ன : அடுத்தவன்காதலியைசுடலாம்.. நம்ப படத்தைஅடுத்தவன்சுடப்புடாது..! இதுதான்கருத்து.. இல்லையாயுவர்ஆனர்? #டவுட்டு


நான்ஏன்எந்தக்கருத்துமேசொல்லாமமண்மோகனாஇருக்கேன்னுதெரியுதா? ஏதாவதுபேசினாஅடிக்கிறாய்ங்க! இல்லசரத்து? #யாரு? யாரோ!


800 ஆண்டுபழமையானஅனுமார்கோவிலைஎப்படிச்சுருக்கமாகச்சொல்வது? ‘மாருதி 800’ !! # முடியல!



இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு

$
0
0






ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.

இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.

அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.

விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில்...


ஏழாம் அறிவு




சீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்? என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!


அதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!


பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.

சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.

ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.

சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.

ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.

டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.

டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.

டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.

      தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.

      டாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

      கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.

      இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!

ஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!






பெண்களே.. பெண்மையே! வாழ்க நீங்கள்!

$
0
0

 





எங்கள் வாழ்வில் அர்த்தம் சேர்த்து, எண்ணங்களில் ஏற்றம் சேர்க்கும்

பெண்மையே , பெண்களே வாழ்க நீங்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் (2008, 2009, 2010, 2011) பட்டியலில் உள்ளவர்களுக்கும்....

இந்த ஆண்டு நட்புகளாய் வந்த,

லஷ்மி ராமகிருஷ்ணன்
ஷாரதா
ஷ்ருதி
ஷ்ரயா


கவிஞர் பத்மாவதி
ஸ்ரீ புவனா
ரேவதி
மணிமேகலை
ப்ரியா
சௌம்யா
கீர்த்தனா
சத்யா
சங்கீதா
கல்பனா

உமா பத்மநாபன்
ராஜி
ஆகியோருக்கும்..
இணைய நட்பாய்ப் பூத்த

கயல்விழி
ப்ரியா முரளி

ஆகியோர்
எந்நாளும் இன்பமாய், ஆரோக்கியமாய், இனிமையாய் வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !! 

( பதிவை… முன்னரே பதிவேற்றி தேதி மாற்றி schedule செய்ததின் விளைவு!! ஒரு நாள் தாமதமாக வெளியாகிறது…)

ஓமப்பொடி # 4

$
0
0

               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.comஇணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!






        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************

குதிரை(க்கொம்பு) யாவாரம்

$
0
0










      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!

தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம்.

ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.

      ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது. அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.

        கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள் அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன் காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.

        அய்யோ..அடித்தல் திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில் விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!

      நம் மகன் அந்தப்பள்ளியில் படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.

எப்போது நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.

வரும் ஞாயிறன்று நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!

ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம் அலைமோதியது.

நம் குழந்தைக்கு எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.

இது என்னடா சோதனை என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா? அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில் நாங்கள் காட்சியளித்தோம்.

அப்போதும் மனம் தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.

என் புத்திக்கு அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.

அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..

ரெண்டு நாள் கழிச்சு சொல்றேனே….!

குதிரை(க்கொம்பு) யாவாரம் -2

$
0
0





என் மகளுக்கு தன் பள்ளியில் இடம் இல்லையென்று அந்த முதல்வர் சொன்ன பின், தங்கமணி அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வி அவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து, ‘பட்டாக்’ என்று இருகரம் கூப்பி வணங்கி….தயவுசெஞ்சு போய்ட்டு வாங்க என்றார். ‘Get out’ என்று நாகரீகமாகச் சொன்னதை மனம் ஏற்க மறுத்தது. மேலும் நான் பேச ஆரம்பிக்க..

ஒரு பிரின்ஸிபால்…நானே இறங்கி வந்து உங்ககிட்ட கைகூப்புறேன். அதுக்கப்புறமும் என்ன இது ….திரும்பத்திரும்ப கேக்குறீங்க? என்று குரலை உயர்த்த… அந்த ‘நானே’ வில் இருந்த அகந்தை, என்னை அசைத்துப்போட்டது. குரலை உயர்த்தலாம் என்று நினைக்கும்போது, காலைக்கட்டிக்கொண்டு தான் படித்த அத்தனையையும் உளறிக்கொண்டிருந்தாள் என் வீட்டு தேவதை..!!

எப்போதும் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் ருத்ர தாண்டவமாடும் சுரேகா என்ற மானஸ்தன், ’பவ்’ என்றுகூடக் கத்தமுடியாமல் நொந்துகொண்டே வெளியில் வந்தான் .

நடந்தவை எவற்றையும் விளங்கிக்கொள்ளமுடியாமல்,
நாளைலேருந்து ’அண்ணன் ஷூல்லதான் நானும் பதிக்கப் போதேனா?’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாணவியாக வேண்டிய மகள்!

தங்கமணியின் கண்ணீரை வைத்து ஆறு டம்ளர் உப்புக்கரைசல் தயார் செய்யலாம்போல் இருந்தது. அதைப்பார்த்து எனக்கே உலகம் அவுட் ஆஃப் போகஸில் தெரிய ஆரம்பிக்க.. கர்ச்சீப்பை எடுத்து லென்ஸைத் துடைத்து ஃபோகஸை சரி செய்துகொண்டேன். # ஆம்பளை அழக்கூடாது சுரேகா! மனசாட்சி வேறு மல்லுக்கட்டியது…

‘என்ன இப்படி பண்ணிட்டாங்க… என்று இருவரும் கறுவிக்கொண்டே வர..

இன்னா சார்! பாப்பாக்கு சீட் வோணுமா என்று ‘ஆட்டோ வோணுமா! என்பது போல் ஒரு குரல் இரகசியமாய்க் கேட்டது.

திரும்பிப் பார்த்தால்..அந்தப் பள்ளியின் கடை..கடை..கடை…நிலை ஊழியர்..!!
உன் நம்பர் குடு சார்… வெளில வந்து மிஸ்டு கால் தரேன்.. வெவரம் பேசுவோம்..!!

என்ன வெவரம் பேசணும்?

ம்மா..சொல்லும்மா சாராண்ட !  சீட் வேணுமா..வேணாவா?

நான் நம்பர் சொல்றேன் என்று என் எண்ணை ஒளிவேகத்தில் சொல்லிமுடித்தார் தங்கமணி..!! பதிலுக்கு அவர் எண்ணையும் வாங்கிக்கொண்டு அந்த தொடர்பை பூர்த்தி செய்தார். Completion of Communication Theory நினைவில் வந்து தொலைத்தது… # இவர் பெரிய மேனேஜ்மெண்ட் குருவாம்..!!

அவரை வெளியில் வந்ததும் தொடர்புகொண்டோம். ட்விட்டரை மிஞ்சும் வகையில் 100 எழுத்துக்களுக்குள் பேசினார்…

குழந்தைக்குக் கட்டவேண்டிய முழுக் கட்டணத்தொகையை… அப்படியே தனது கட்டிங்காகக் கேட்டார். அதற்குப் பிறகு நாம் பள்ளிக்கட்டணம் தனியாகக் கட்டவேண்டும். இது சேவைக்கட்டணம் மட்டுமே! (இங்கு லஞ்சம் என்பது கடமையை மீற எனக் கொள்க!) அந்த சமூக சேவகர். ! (அந்தப்பள்ளியில்தான் சீட் வேண்டும் என்று கல்விக்குத் தத்தளிக்கும் சமூகத்துக்கு சீட் வாங்கிக்கொடுக்கும் சேவகர் சமூக சேவகர்தானே…? )

‘சீட் கெட்சப்புறம் பணம் குடு சார்.. எல்லாம் மேல உள்ளவங்க பண்றது..நம்ப கைய்ல எதுவ்மே கெடியாது.!  .என்று நியாயம் வேறு சொன்னார்.

நான் முதலில் கட்டாயமாக மறுத்தேன்..!! அரிச்சந்திரன் ஆக யத்தனித்தேன். ஆனால்..
அதற்குப்பிறகு காட்சிகள் மாறின..

பல்வேறு மறுத்தல்கள், ஒப்புதல்கள், சண்டைகள்,
படிப்பைத்தவிர வேற என்ன செய்யப்போறோம்..

நமக்குத்தான் நேர்வழில சீட் வாங்க துப்பு இல்ல!

அவனவன் லட்சக்கணக்குல பணம் கட்டி பிள்ளைங்களைப்படிக்க வைக்கிறான்..!

வேற எந்த ஸ்கூல்லயும் இனிமே சேக்க முடியாது.. ரெண்டு ஸ்கூல்..ரெண்டு வேன்னு நான் திண்டாட முடியாது..!

‘ஒங்களுக்கு பிள்ளைங்க எதிர்காலத்துல அக்கறையே இல்லையா?

என்ற பிரம்மாஸ்திரம் உட்பட அத்தனை அம்புகளையும் வாங்கிக்கொண்டு…கர்ணன் தேருக்கடியில் அமர்ந்திருந்த கோலம் நினைவில் வந்தது. தான தர்மத்தைக் கொடுப்பதுபோல்….சீட் வாங்கிக்கொடுக்கும் கண்ணனுக்கு… பணம் தருகிறேன் என்று சொன்னதுதான் தாமதம்..!! படாரென்று குழந்தையின் அப்ளிகேஷன் எண் மற்றும் பெயர் வாங்கிக்கொண்டார்..அன்று இரவு தூக்கமே வரவில்லை..! #உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாட்டு வேறு…!! இவர் கர்ணனாமாமாம்..!!

அடுத்த நிகழ்வுகள் சட சட வென சடுதியில் நடந்தேறியது.

   அதேபோல் இரண்டே நாட்களில் நேர்முகத்தேர்வு அழைப்பு… அது கண் துடைப்பு என்று தெரிந்தே சென்றதால்..எங்கள் அலைப்பறைக்கு அளவே இல்லை..

  குட்டிக்கு இது டகால்ட்டி இண்டர்வ்யூ என்று எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அவளும்.. ஆ வைக்காட்டி எ என்றாள். P ஐக் காட்டி D என்றாள். கருப்பை , வெள்ளை என்றாள். அனைத்துக்கும்.. அந்த டீச்சர் ஓ.. அப்படியா என்று மிகச்சரியாக பதில் சொன்னதுபோல், அன்பாக ஆமோதித்து,..அப்படியே ரைட் சைட் போனீங்கன்னா பிரின்ஸிபால் ரூம்…அங்கபோய் அவங்களைப் பாத்துருங்க! என்றார்.


பிரின்ஸிபால் ரூமுக்குச் செல்லும் தூரம் அதிகமாவதுபோல் இருந்தது. லேசாக தடுமாற்றம் வேறு..ஆனால்..பணம் கொடுத்து சேர்த்திருக்கோம். ஏன் பயப்படணும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, லந்தாக உள்ளே நுழைந்தோம்.

எங்களைக் கண்டதும், அவர் கண்ணில் மிக மிக மைக்ரோவாக ஒரு ஜெர்க்..

பின்னர் சுதாரித்துக்கொண்டு..

சந்தோஷம்..பாப்பாவை சேத்தாச்சா!

இதான் இந்தப்பள்ளிக்கூடத்தோட சட்டதிட்டங்கள். இத்தனாந்தேதி ஓப்பன் பண்றோம். இங்க போய் யூனிபார்ம் வாங்கிக்குங்க என்று இதுவரை பார்த்தேயிராத இருவரிடம் பேசுவதுபோல் சிறப்பாக நடித்தார்..#ஊரில் நடிக்க ஆள் கிடைக்காம தடுமாறுது எங்க சினிமா இண்டஸ்ட்ரி..!!

நான் செய்த அளும்பு அதற்கு மேல்.!.அவர் முன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு,.. அவர் ரூமையே சுற்றிப்பார்த்துக்கொண்டு.. அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு… என வஞ்சம் அனைத்தையும் தீர்த்துக்கொண்டேன்.

அறையைவிட்டுக்கிளம்பும்போது…இரு கைகளையும் பட்டார் என்று கூப்பி வணக்கம் வைத்து.. ’ போய்ட்டு வரோம் மேடம்’ என்றேன். என்னால் செய்யமுடிந்த ஒரே பழிவாங்கல்! ஆனால்..விலைதான் மிக அதிகம்..!! ஆனால், தங்கமணியின் சிரிப்பின் வெளுப்பில்… ஒரு டே நைட் ஐபிஎல் மேட்சுக்கு ஒளி கொடுக்கலாம் போலிருந்தது.

வாசலில், நம்ப புண்ணியவான் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை சொன்ன மாதிரி கொடுத்துவிட்டு பிரின்ஸிபாலுக்கு வைத்திருந்த வணக்கத்தை அவருக்கு வழங்கினேன். ஏனெனில் சீட் வாங்கிக் கொடுத்தவர்தான் என்னைப் பொறுத்தவரை அந்தப் பள்ளியின் முதல்வர்!

மொத்தத்தில்..குட்டிப்பாப்பா LKGயில் சேர்ந்துவிட்டாள்.

இப்படியாக முதல் வாரம் சீட் இல்லையென்று துரத்திவிடப்பட்டு அழுதுகொண்டே வெளியேறிய நாங்கள்…அடுத்த வாரத்துக்குள் ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை அதிகப்படியாக அழுதுவிட்டு சீட் கிடைத்த பெருமிதத்துடன் அதே பள்ளியிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியில் வந்தோம்..

சொந்தங்களுக்கு ஃபோன் பறந்தது.

‘ பாப்பாவை ஸ்கூல்ல சேத்தாச்சு! ஒரு பிரச்னையுமில்லை…ஸ்வீட் எடு கொண்டாடு! …!!

ஆனால்…இதன் பின்னணிப் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு பூதாகரமாகத்தெரியவந்துள்ளது. எவ்வளவு பெரிய குதிரை வியாபாரம்.. அதன் கொம்பாக மாற்றப்பட்டு, வியாபாரத்தின் விலை இன்னும் அதிகமாக்கப்படுகிறது என்பதும் புரிந்திருக்கிறது. 

சிரித்துக்கொண்டே இதைக் கடந்து போகிறவனில்லை நான்..!! என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்..! இந்தப் பிரச்னையை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டியிருப்பதால்.. இது ஒரு இடைவேளைதான்..!! பல மாதங்கள் கழித்து, வெடிக்கும்போது அனேகமாக ஒரு செய்தித்தாளில் என் சிரிக்கும் புகைப்படத்தை நீங்கள் கண்டாலும் ஆச்சரியமில்லை.






ஒரு பேரீச்சையும் , இரண்டு மிக்ஸிகளும்..!!

$
0
0




     இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு…

மறுபடியும் கேட்டால் கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது இந்த உலகம்.!
இந்த ஏப்ரல் 14 அன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். அங்கு ஒரு லயன் டேட்ஸ் பேரீச்சை அரைக்கிலோ பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தாயிற்று.!

பெட்டியை பிரிக்காமலேயே வைத்திருந்து, 19ம் தேதி அதைப் பிரித்து ஒரு பழம் எடுத்து தின்னலாம் என்று பார்த்தால், முதல் பழத்திலேயே வாலைக்குழைத்துக்கொண்டு, மூக்கை நீட்டியது ஒரு குட்டி வெண் புழு ஒன்று!

திடுக்கிட்டுப் போனேன். சரி.. ஒரு பேரிச்சையில் தான் இருக்கும்போல என்று அடுத்ததை எடுத்தால் அதில் ஒரு கருப்பு நிற குட்டீஸான வண்டு.. புழுவின் பெரியக்கா போலிருக்கிறது. அப்புறம் சில பழங்கள் சுத்தமாக இருந்தது. மீண்டும் புழு..!

ஆஹா.. பழைய சரக்கை வாங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்து டப்பாவைப் பார்த்தேன். தெளிவாக மார்ச் 2012 என்று போட்டிருந்தது. ஆக இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதில் நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று போட்டிருந்தது.

இதை இப்போது எப்படி மாற்றுவது என்று யோசிக்கும்போதே, தங்கமணி,
‘அவ்வளவுதான்! குப்பைல போடவேண்டியதுதான்..! இதுக்காக எடுத்துக்கிட்டு புதுக்கோட்டைக்கா போவீங்க? ம்….நீங்க போனாலும் போவீங்களே? என்று கறுவினார்.

இது என்னடா சோதனை என்று எண்ணிக்கொண்டே, அந்த டப்பாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். கஸ்டமர் கேர் எண் கிடைக்கும்..அதில் கேட்கலாம் என்று! ஆனால் அப்படி ஒரு எண் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. மீண்டும் மிகவும் கூர்ந்து தேடியதில் ஒரு எண் அச்சிடப்பட்டிருந்தது. அதில் , யாரும் அவ்வளவு சீக்கிரம் படித்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கிருந்த கவனம் தெளிவாகத் தெரிந்தது.

பரவாயில்லை என்று அதையும் லென்ஸ் வைத்து எண்ணைக் குறித்துக்கொண்டு அவர்களுக்கு போன் அடித்தேன். ஒரு பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன்.  

உடனே, உங்களுக்கான தீர்வு இன்னும் இரண்டு நாளில் கிடைக்கும் சார்! என்று சொல்லி, என் பெயர் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்..

இரண்டு நாட்களுக்குப்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் மூன்றாவது நாள் அழைத்தேன். அந்தப் பெண் விடுப்பில் போய்விட்டார். (அனேகமாய் நான் அழைப்பேன் என்று நினைத்திருப்பாரோ? J ) வேறொரு பெண் எடுத்தார். அவரும் விபரம் கேட்டார். எனக்கு மூக்கு வாசலில் நின்றிருந்த கோபம் வாயில் படி ஏறியது.

‘டெய்லி உங்களுக்கு பிரச்னையை சொல்ல நான் இல்லை..! உங்களுக்கு மேலதிகாரி யாரேனும் இருந்தால் போனைக்கொடுங்க இல்லையென்றால், நான் என்ன செய்யணுமோ செஞ்சுக்குறேன் என்றேன்.

அடுத்தவினாடி போனில் ஒரு ஆண்குரல் கேட்டது. அவர் மிகவும் தன்மையாகப் பேசினார்.

நான் பெயர் மட்டும்தான் சொல்லுவேன். என் பிரச்னையை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. இதற்குமேல் நான் சொல்லமாட்டேன் என்றேன்.
ஓக்கே சார்..! என்று சிலவினாடிகளில்.. நீங்கள் வாங்கிய டேட்ஸ் டேமேஜ் என்று போட்டிருக்கு சார்.. ! என்னவிதமான டேமேஜ் என்று தெரிந்துகொள்ளலாமா? என்றார். நானும் சொன்னேன்.

உங்கள் நியாயம் புரியுது சார். ! கட்டாயம் உங்களுக்கு உதவுறோம். இன்னும் ரெண்டு நாளில் தீர்வு வந்துடும் என்றார்.

மீண்டும் இரண்டு நாள் ஆனது. அப்போதுதான் எனக்கும் இணையதளத்தில் லயன் டேட்ஸின் தலைமை அலுவலகத்தைத் தேடினால் என்ன என்று நினைத்தேன். அதேபோல் திருச்சி லயன் டேட்ஸின் முகவரியும், எண்ணும் கிடைத்தது. அதற்கு உடனே அழைத்தேன். அப்போது மாலை 4 மணி..!!

ஒரு பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன்.  கொஞ்சம் அதிக டோஸும் விட்டேன்.

நீங்க என்ன நடவடிக்கை எடுக்கப்போறீங்கன்னாவது சொல்லுங்க! இல்லைன்னா நான் என்னிடம் உள்ள பேரீச்சையை ஒரு லேபில் கொடுத்து நச்சுப்பொருள்னு சான்றிதழ் வாங்கி உங்களை கவனிச்சுக்குறேன் என்றேன்.

உங்களை இன்னும் பத்துநிமிடத்தில் கூப்பிடுறேன் சார்! என்று அந்தப்பெண் சொன்னார்.
சரியாக 8வது நிமிடம் அழைத்தார்.

சிரமத்துக்கு மன்னிக்கணும் சார்.! உங்களுக்கு நாங்கள் மாற்று பேரீச்சம்பழ டப்பா அனுப்புகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கொரியர் எண்ணை மாலையில் அழைத்து சொல்கிறேன் என்றார். அதேபோல் மாலை அழைத்து சொன்னார்.

அடுத்த நாள் காலை 11 மணிக்கு ஒரு முழுமையாக பேக் செய்யப்பட்ட, அரைக்கிலோ லயன் டேட்ஸ் பேரீச்சை என் வீடுதேடி வந்தது.

அதில் ஒரு அற்புதமான கடிதமும் இருந்தது.

அதன் சாராம்சம் இதுதான்.

எங்கள் தயாரிப்பை வாங்கியதற்கு நன்றி!
அதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு மிகவும் வருந்துகிறோம். அப்படி எப்போதும் நடப்பதில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. மன்னிக்கவும். உங்களுக்கு அரைக்கிலோ பேரீச்சை அன்பளிப்பாக அனுப்பிவைத்துள்ளோம். பெற்றுக்கொள்ளவும்.

தங்கமணி அப்போதுதான்…கேட்டால் கிடைக்கும் என்று நம்பினார்.

  இந்த விஷயத்தில் லயன் டேட்ஸ் சிறந்த சேவைதான் செய்திருக்கிறார்கள். நான் உண்மையில் இங்கு ஏதாவது ஷோரூமில் கொண்டு கொடுத்துவிட்டு மாற்று பெட்டி வாங்கிக்கொள்ள சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், புதிதாக ஒரு பொருளே அனுப்பிவிட்டார்கள்.

  ஒரு வாடிக்கையாளர் பொய் சொல்லமாட்டார் என்று அவர்கள் நம்பியதற்கு இதுவே சாட்சி! அவர்களை நான் கூப்பிட்டு முதலில் அன்பாகக் கேட்டு, பின்னர் கொஞ்சம் அதட்டி என்று அனைத்தும் நடந்தது கஸ்டமர் கேர் கால் செண்டரில்தான். அவர்கள் அனேகமாக லயன் டேட்ஸின் அவுட் சோர்ஸிங் கால் செண்ட்டராக இருக்கலாம். அதனால் அவர்களது பதிலில் கொஞ்சம் கவனமின்மை இருந்தது.

  தலைமை அலுவலகத்துக்குப் போன் போட்டபின் உடனே மாற்றுப்பொருள் வந்தது மிகவும் திருப்தியை ஏற்படுத்தியது.

இது…கேட்டதால்தான் கிடைத்தது. இல்லையேல் , புழு வந்த பேரீச்சையை தூக்கிப்போட்டுவிட்டு மற்ற வேலையைப்  பார்க்கப் போயிருக்கலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளரின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நினைத்ததால், கேட்டேன். கிடைத்தது.
ஆதலால்தான்..மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்… கேட்டால்..கிடைக்கும்!


அடுத்து மிக்ஸிக்கு வருவோம்.


ராஜமாணிக்கம் என்ற திருப்பூர் நண்பர்..

இரண்டு ப்ரீத்தி மிக்ஸிகள் வாங்கியிருக்கிறார். அதில் ஐ எஸ் ஐ முத்திரை இல்லை. அப்போதே கேட்டிருக்கிறார். அதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க! ப்ரீத்திக்கு நாங்க கேரண்ட்டி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரைகுறையாக ஏற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்று போட்டுப்பார்த்தால், புஸ்ஸென்று புகைவந்து மிக்ஸி மண்டையைப் போட்டுவிட்டது.

உடனே அவர்களிடம் கொண்டு சென்றால்…

அது கம்பெனி வாரண்ட்டிதான். அங்கு கொண்டு சென்று கொடுங்கள் என்றார்களாம்.

அங்கு கொண்டு சென்றால் அந்த மிக்ஸியை வாங்கி வைத்துக்கொண்டு ரிப்பேர் செய்து தருவதாக 15 நாட்கள் அலைய விட்டிருக்கிறார்கள். 

பின்னர்தான் எங்கள் கேட்டால் கிடைக்கும் முகப்புத்தக பக்கத்தில்…அதைப்பற்றி புலம்பியிருந்தார்.

நான் உடனே ப்ரீத்தியின் இணையதளத்துக்குப் போய், திருப்பூர் கிளையின் மின்னஞ்சலை எடுத்து.. கீழ்க்கண்ட மெயில் அனுப்பினேன்.

//   வணக்கம்..
  
எங்களுக்கு உங்கள் நிறுவனம் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறது.
அதனை சரி செய்யவும் 
அப்படி சரி செய்தபிறகு பதில் மின்னஞ்சலும் செய்து விடவும்.

வாடிக்கையாளர் பெயர் : வீரா ராஜமாணிக்கம்
ஊர் : திருப்பூர்

வாங்கிய இடம் : பிக் பஜார்.

அவரது முதல் புகார். . உங்கள் மிக்ஸியில் ISI முத்திரை இல்லை என்பது.. அது உண்மையெனில்.. உங்கள் நிறுவனத்தையே சட்டத்தின் முன்னால் இழுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.

இரண்டாவது புகார் , வாங்கிய உடனேயே மிக்ஸி புகைந்தது என்பது... அதற்கு நீங்கள் கேள்வியே கேட்காமல், புதிய மிக்ஸி மாற்றித்தந்திருக்கவேண்டும்.

இன்னும் அந்த வாடிக்கையாளரை அலைய விடுகிறீர்கள் என்று தெரிகிறது

இதற்கு மேலும் உங்கள் கவனமின்மை தொடர்ந்தால்,  கட்டாயம் மிக்ஸி விலையை விட அதிகமாக நீங்கள் நஷ்ட ஈடு தரவேண்டியிருக்கும்.

உடனடியாக இதை கருத்தில் கொள்ளவும்

நன்றி

சுரேகா
கேட்டால் கிடைக்கும் //

மேலும் நமது கேட்டால் கிடைக்கும் நண்பர்களையும், இது சம்பந்தமாக அந்த எண்ணுக்கு அழைத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அன்று நம் நண்பர்கள் போன் போட்டு அவர்களைப் பின்னி எடுத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் காலை, புதிய மிக்ஸி ஒன்று அவரது வீட்டுக்கே சென்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது மிக்ஸியும் அதற்கடுத்த நாளே கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள்.

அது தவிர.. அந்த நிறுவனத்தின் AGM எனக்கு கீழ்க்கண்டவாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

//Dear Sir


We are in receipt of your e mail dt.25th April 2012 about Mr Raja manikkam Preethi Mixie issue  and regret to note the contents. We are committed to quality, customer service and satisfaction and it is our constant endeavor to meet the changing needs of our customers.

Regarding your specific query, (a) We have already replaced the motor on the same day, (b) We have replaced the Mixie unit by this day, to satisfy the consumer requirement, even though, at present there is no fault in the Mixer and (c) attached customer satisfied report for your reference.


This is for your information.


Thanking you,

Yours faithfully

For Preethi Kitchen Appliances (P) ltd.//


மேலும் அவர் வீட்டில் டெலிவரி செய்த சலானும் எனக்கு ஒரு பிரதி வந்திருக்கிறது.

ஊர்கூடித் தேரிழுத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் தொலைபேசிய நண்பர்கள் அனைவருக்கும் கேட்டால் கிடைக்கும் சார்பாக, கேபிள்சங்கர், சுரேகா சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மாசத்துக்கு ஒரு பிரச்னை ஒய்ந்தது என்று நினைத்தால்..

கார் ஆடியோ பிரச்னை ஒன்று வரிசையில் நிற்கிறது..!! அதை முடிச்சுட்டு சொல்றேனே..!!

ஓமப்பொடி # 5

$
0
0



     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்..

கையெழுத்துப் பயிற்சி,
கலர் அடிக்கும் பயிற்சி,
காசு எண்ணும் பயிற்சி,
பூஜை செய்யப் பயிற்சி,
புத்தகம் படிக்கும் பயிற்சி,
பாட்டுப்பாடும் பயிற்சி,
படம் வரையப் பயிற்சி,
பறவை பார்க்கப் பயிற்சி
போட்டோ எடுக்கப் பயிற்சி,
முதலுதவிப் பயிற்சி,
பொருள் அடுக்கப் பயிற்சி
இசை கேட்கப் பயிற்சி
இசை வாசிக்கப் பயிற்சி
சதுரங்கப் பயிற்சி
சக்கரக்கால் பயிற்சி
சோறு உண்ணப் பயிற்சி
யோகா பயிற்சி
அபாக்கஸ் பயிற்சி

என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள்.

இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது. 

 விடுமுறையில் வில்லனாகும் பெற்றோரை எப்படி கதற விடலாம்  என்று சிந்தித்துக்கொண்டே சிறார்கள் சாலையைக் கடப்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு பள்ளிக்கூடமே தேவலை.. இந்த லீவு விட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் வண்ணம் டார்ச்சரை அனுபவிக்கிறார்கள்.

 பெற்றோரின் ஒரே பிரச்னை.. ஒரு மாசம் வீட்டில் இருந்தால், வீடே ரெண்டு செய்வார்களே என்றுதான்.!! அதற்குத்தான் பிள்ளைகள். ! அதை சகிக்கும் வகையில் ஆக்கிக்கொள்ளும்போதுதான் நம் வாழ்வு இனிக்கும்.! அதைவிடுத்து பயிற்சியில் சேர்த்தே கொல்லும் கலாச்சாரம் பயமுறுத்துகிறது.

நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.

அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது இருக்கட்டும்..! குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

********************************************************************
சென்ற மாதத்தில் கன்னாபின்னாவென்று வேலை ! மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை பின்னுவதிலும், ஒரு புத்தகம் எழுதுவதிலும் ஆழமாகக் கழிந்தது. இதற்கிடையே பயிற்சி வகுப்புகள் வேறு!

மே ஒன்றாம் தேதி. .தொழிலாளர் தினத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் சரியாகப்பயன்படுத்தவில்லை என்ற விவாதத்தில் பங்கெடுத்தேன். சுவாரஸ்யமாகச் சென்றது.
     என் வாதம் இப்படி இருந்தது. : அரசு தொழிலாளர்களுக்கான நடைமுறைகளையும், உரிமைகளையும் வகுத்த்துக்கொடுத்துள்ளது. அதை நியாயமான முறையில் கேட்டுப்பெற தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. ஆகவே நிர்வாகங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அதற்காக ஒட்டுமொத்த நிர்வாகங்களையும் குறை சொல்வதற்கில்லை. சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் சிறப்பாக நடத்துகின்றன என்று பதிவு செய்தேன். தொழிலாளர்களை போலீஸ் அடிக்கிறது என்ற வாதத்துக்கு, அவர்களும் ஒரு வித தொழிலாளர்கள் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களால் சங்கம் தொடங்கமுடியாது என்றேன். முக்கியமாக எதையுமே கேட்டால் கிடைக்கும் என்று வலியுறுத்தினேன். கம்பேனி விளம்பரத்தை அப்புறம் எப்படித்தாம்பா செய்யுறது என்று நினைத்தாலும்.. ஒரு உண்மை பரவட்டுமே என்றுதான்..

அடுத்து வரும் வாரங்களில் ஒரு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நான் பங்குபெற்ற சந்தித்த வேளை நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

*******************************************************************



   நானோ , யாரோ அந்தக்காரை வாங்கியிருந்தாலும், உடனே ’ஓ..அதுவா?’ என்று கேட்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது. ஆம்.. அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள். உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது. ஆட்டோ போல் குறுகிய பாதைகளில் ஓட்ட முடிகிறது. ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மைலெஜும் 20 வருகிறது. பப்பாளி ஆரஞ்சு வாங்கியிருக்கிறேன். பெயர்தான் நானோ என்று இருக்கிறதே ஒழிய.. கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை. ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்!

காரில் பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது. அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
             *******************************************************************
வாயுதூதனின் வாஞ்சையால், சென்னையில் மின்வெட்டு இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது.. என்று அவர் பீஸைப்பிடுங்குவார் என்று தெரியவில்லை. அரசு செய்யததை இயற்கை செய்கிறது….. இப்போதுகூட அதைப் புரிந்துகொள்ளாவிட்டால்….சுனாமிதான்..!


               *******************************************************************

மே மாதத்தில் 7 ம் தேதியிலிருந்து 20 நாட்கள் வட இந்தியப் பயணம், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், ராஜஸ்தான் என்று பல்வேறு மாநிலங்கள்… பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள்! ஒரே வேலை! பயிற்சி வகுப்புகள்..!!
வாணலியிலிருந்து தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J  

நான் அவர்களைச் சொன்னேன்.. !




ஓமப்பொடி # 6

$
0
0




இடையில் எதுவுமே பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது தெரியவில்லை.

சென்ற மாதம்  ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன. நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப் பேசியிருக்கிறார்கள். இவர்களும் போராடிப்பார்த்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதுதான்… நமது பேரீச்சை கதையைப் படித்துவிட்டு..ஷர்புதீன் இந்த நிறுவனத்தை என்ன செய்வது என்று கேட்டார். என்னிடம் முழு விபரங்களும் கொடுத்தார்.

உடனே, கோவையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு தொலைபேசினேன். அதன் மேலாளர் ராஜேந்திரனிடம்.. வாடிக்கையாளரை முட்டாளாக்கினால் என்னன்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னேன்’. மேலும் நமது கேட்டால் கிடைக்கும் அமைப்பு பற்றியும்.. நான் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்பதையும் சொல்லி, அவர்களுக்கு ஸ்டவ்வை மாற்றிக்கொடுக்கும்படியும் சொல்லி வைத்தேன்.

அதற்குப் பிறகு 8 நிமிடங்களில், ஷர்புதீனின் நண்பரிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்தது.

‘சார்..அந்த ஸ்டவ் கம்பெனிலேருந்து ஃபோன் வந்துருச்சு சார்!  உடனே ஸ்டவ்வை எடுத்துக்கிட்டு வந்து மாத்திக்கச் சொல்லிட்டாங்க சார்! நான் எத்தனை தடவை போய் சத்தம் போட்டும், சரியா பதில் சொல்லாம அலட்சியப்படுத்திக்கிட்டிருந்தாங்க! நீங்க பேசினதுக்கப்புறம் இப்படி பவ்யமா பேசுறாங்க! ரொம்ப நன்றி சார்! ஆமா..அப்படி என்ன சார் சொன்னீங்க?” என்றார்.

’உண்மையைச் சொன்னேன்’ என்றேன். :)

ஆம். ஒரு வாடிக்கையாளரின் உரிமையை தெளிவாக , ஆத்திரப்படாமல், அழுத்தமாகக் கேட்கும்போது…கண்டிப்பாக கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் ஒருவரது பிரச்னையை இன்னொருவர் தட்டிக்கேட்கும்போது….தவறு செய்யும் வியாபாரிக்கு…’’ஆஹா..ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா’ என்ற எண்ணம் வருவதால்தான் காரியம் நடக்கிறது.

நிச்சயம் ஒன்று கூடுவோம்.


டாட்டா நானோ,- கார் வாங்குவதற்காக, டாட்டா ஃபைனான்ஸ் என்று அவர்களே கடன் தரும் நிறுவனமும் வைத்திருக்கிறார்கள்.

நானே கடன் தரேன். நானோ வாங்கிக்க!’ என்று ஸ்லோகன் வைக்கலாம்!

அதில் நான் கார் வாங்கும்போது , முன் பணமாக 30000 கட்டவேண்டும். மிச்சத்தை மாதத்தவணையாக பிரித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்காக 9 செக்குகள் தரவேண்டும் என்றார்கள். சரி என்றேன். மூன்றில் தொகையை பூர்த்தி செய்துகொள்ளலாம். மற்ற 6 செக்குகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல், கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுக்கவேண்டும் என்றார்கள்.

ஆரம்பித்தது பிரச்னை!

இந்திய அரசியல் சட்டத்திலயோ, இந்திய நிதிச் சட்டத்திலயோ, யாராவது யாரிடமாவது பூர்த்தி செய்யப்படாத செக் கொடுக்கலாம்னு இருக்கான்னு காட்டுங்க ! என்றேன்.

பதில் சொல்லத்தெரியவில்லை..
நான் கண்டிப்பாக ப்ளாங்க் செக் தரமாட்டேன். என் தவணைத்தொகையை பூர்த்தி செய்துதான் கொடுப்பேன் .. இல்லைன்னா.. நீங்க 6 ப்ளாங்க் செக் குடுக்கணும்னு டாட்டா ஃபைனான்ஸ் லேருந்து எனக்கு ஒரு லெட்டர் வாங்கிக்கொடுங்க என்றேன்.


அப்போது லேசாக ஜகா வாங்கினார்கள்.

உடனே நானே, 9 செக்குகளையும் தவணையைப் பூர்த்தி செய்தே கொடுத்துவிட்டேன். அதை வாங்கிக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு டாட்டா நிதி அலுவலர் என்னிடம் தொலைபேசினார்.

சார்! என்ன நீங்க எம்ப்டி செக்கே குடுக்காம விட்டுட்டீங்க? அப்படின்னா உங்களுக்கு கார் கிடைக்காது சார்!

சுர்ரென்று ஏறியது.

எம்ப்டி செக்குதானே வேணும் ? பத்து செக்குகூட தரேன். ஆனால் கையெழுத்தும் இருக்காது பரவாயில்லையா?

அப்புறம்..கார் கிடைக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? கார் வாங்க லோன் கிடைக்காதுன்னு சொல்ற வரைக்கும்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கு! அப்ப நீங்கதான் நானோவும் விக்கிறீங்களா? வி.எஸ்.டி மோட்டார்ஸ் கிடையாதா?
என்று சொல்லவும்..

அந்த ஆள் தடுமாற ஆரம்பித்தார்.

இப்ப சொல்லுங்க..!! உங்க பேச்சை ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். டாட்டா ஃபைனான்ஸில் நானோ கார் வாங்க கடன் வாங்கணும்னா, ப்ளாங்க் செக் குடுக்கணுமா? அப்படி கொடுத்தால், ப்ளாங்க் செக் வாங்கியிருக்கேன்னு நீங்க லெட்டர் குடுப்பீங்களா என்றேன்.

பப்பப்பா…பப்பராப்பா..!! என்று ஆர்யா, அமலாபால் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் ஒரு நீண்ட மின்னஞ்சல் ஒன்றை , டாட்டா ஃபைனான்ஸின் தலைமைக்கு அனுப்பினேன்.
அலறிக்கொண்டு அடுத்தநாள் மதியம் , அதே அதிகாரி போன் செய்தார். என்ன சார் நீங்க பாட்டுக்கும் மேல எல்லாம் எழுதிட்டீங்க? உங்க லோன் பேப்பரை நேத்திக்கே ‘நான்’ அப்ரூவ் செஞ்சுட்டேன் சார்..!! சும்மா ஒரு செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக செக் வாங்குவோம் சார்! நீங்க பணம் கட்டாம விட்டுட்டீங்கன்னா அதை பவுன்ஸ் பண்ணி உங்களை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் என்றார்.

அதெப்புடி? செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக, என் சொந்தவீட்டுப் பத்திரத்தைக் கொடுத்துத்தான் கார் வாங்கணுமா? என்று கேட்டுவிட்டு,, எவ்வளவு ரூபாய் போட்டு செக் கொடுத்தாலும்..அதை வச்சு என்னை கோர்ட்டுக்கு இழுக்கலாம். அதைவிட ஒரு மேட்டர் புரிஞ்சுக்குங்க..!! ஏமாத்துறவந்தான் நீங்க சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டு, கேக்குற செக்கெல்லாம் குடுப்பான். ஏமாத்தாதவன் இப்படித்தான் கேள்விகளா கேட்டு ஒழுங்கா பணத்தை கட்டுவான் என்றேன்.

இப்படியாக, இந்த நீதியே தெரியாமல் நிதி உதவி செய்யும் நிறுவனங்களின் ஆட்டத்துக்கு நடுவே, ஒரு ப்ளாங்க் செக் கூட கொடுக்காமல், நான் நானோ வாங்கிவிட்டேன்.

அடுத்து இன்னொரு கூத்து நடந்தது..!!

வாரக்கடைசில சொல்றேன்.

சென்ற மாதம் வட இந்தியப்பயணம் இனிதே நிறைவுற்றது.
இந்தியாவே சூடாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. அதுவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்ற நரகம் – தெளிவாகத்தான் தட்டச்சினேன். நகரம் அல்ல..! நரகம்தான்..!! காலை4:40க்கெல்லாம் விடிந்து…இரவு 8 மணிவரை கதிரவன் வேலை  பார்க்கிறான். அதுவும் பகல் 12 மணிக்கு…வெளியில் 40 அடி நடந்திருப்பேன். நிழலைப்பார்த்து ஓடிவிட்டேன். இன்னும் 40 அடி நடந்திருந்தால், சுருண்டிருப்பேன். உண்மையான வெய்யிலை அங்குதான் அனுபவித்தேன். சவுதி அரேபியாவின் பாலைவன வெப்பத்தை விட அதிகமாக இருந்தது.

மரங்களை வெட்டுவதையே பிழைப்பாக வைத்திருந்தால், சென்னைக்கும் அந்த கதி வரும் நாள் தூரத்தில் இல்லை என்றே படுகிறது.


இந்தியாவில் அனல் மின் நிலையங்கள்தான் அதிகமாக உள்ளன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயம் இருக்கிறது. மின் உற்பத்தி என்று நாம் சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். அதன் பின்னணியில் எத்துனை இளைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்று நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. சம்பளத்துக்காத்தான் வேலைபார்க்கிறார்கள் என்று சாதாரணமாக புறம் தள்ளிவிடமுடியாது. அனல் மின் நிலையம் ஒரு வினாடி நின்றால் கூட, மீண்டும் அதனை உடனே இயங்க வைக்க இவர்கள் பல நாட்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியுள்ளது. உற்பத்தி, தேவை என்ற இரு பல்சக்கரங்களுக்கிடையில் இவர்களும் அரைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்

என்றோ வரப்போகும் போருக்காக, நம் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருக்கும் வீரர்களை விட… தினமும் நம் வீட்டில் விளக்கெரிய, அந்த அனல் காற்றில் போரிடும் இந்த இளைஞர்கள்தான் வணங்கப்பட வேண்டியவர்கள்! ஒவ்வொருமுறை மின்சாரத்தை வீணடிக்கும்போதும் இதை நினைவில் கொள்ளலாம்.! யாரோ ஒரு இளைஞனின் தூக்கத்தை நாம் களவாடிக்கொண்டிருக்கிறோம்
                   ___________________________________

ஷங்காய் என்ற ஹிந்திப்படம் பார்த்தேன்..நிதர்சனத்தை அப்படியே சொன்ன விதமும்.. உண்மையின் குரூரமும் தூங்கவிடாமல் செய்தது. ஷங்காய் என்றால், ‘தவறு செய்யத் தூண்டுவது’ என்று பொருள் வரும். 

உண்மைதான்.. ஒருவனை தவறுசெய்ய என்னவெல்லாம் தூண்டுகிறது. அரசு என்பது எவ்வளவு பெரிய அராஜக வாதிகளால் நிரம்பியிருக்கிறது என்று அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
‘நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என்று லக்கிலுக் எழுதியிருக்கிறார். உண்மைதான்.!! 
கேபிளின் விமர்சனம் படித்துத்தான் படத்துக்குப் போனேன். !!
முக்கியமான விஷயம்..சென்னையில் இந்த மல்டிப்ளெக்ஸ்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது. !! ஆம்..!

பானிப்பட் சினிமேக்ஸில் ஒரு டிக்கட் 50 ரூபாய்தான்..!! 

டிக்கட் விலையை கண்டுக்காம இருந்துட்டு அப்புறம் தமிழ் சினிமா வாழலைன்னு அடிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்.? 

அங்கயும் ஒரு பாயாசத்தைப் போட்டுறவேண்டியதுதான்..!!

தலைவா, வா!

$
0
0

      

      நீண்ட நாட்களாகவே நண்பர்கள் கேபிள் சங்கர், கே ஆர் பி செந்தில் ஆகியோர், நீங்கதான் சாவிக்குப் பிறகு, அடுத்து மேலாண்மை சம்பந்தமாக மிகவும் எளிமையான நடையில் ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று வலியுறுத்தினார்கள். சரியான விஷயம் கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தேன்.

         சென்ற மார்ச் மாதம், என் விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்த அன்று, அன்பு எழுத்தாளரும், இளைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய ஆசானுமான பா.ராகவன் அவர்கள் ‘லீடர்ஷிப் பற்றி ஒரு புத்தகம் எழுது! ஒரு மாசம் டைம் தரேன் என்று ஆணையிட்டார். சில குறிப்புகளும் கொடுத்தார்.

   தலைவனுக்குரிய தகுதிகளை பல்வேறு புத்தகங்கள் பிரித்து மேய்ந்து விட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளிவந்த சில புத்தகங்கள் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவற்றிலிருந்து அடி நாதத்தை எடுத்துக்கொண்டு, நம் சூழலுக்கேற்ப ஒரு கதையாக வடிவமைத்து மெதுவாக ஆனால் சீரியஸாக எழுத ஆரம்பித்தேன். தலைமைப்பண்புகளை தனித்தனி கட்டுரைகளாகப் படிக்காமல், ஒரு கதையாக, நாவலாகப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்க விழைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் இதனை Business Novel என்பார்கள். முழு ஈடுபாட்டுடன் செதுக்கி, எளிமையாகக் கொண்டுவர முயற்சித்து… ஒரு வழியாய் முடித்துவிட்டேன்.  
அந்தப் புத்தகம் ’தலைவா, வா! என்ற பெயரில், பிரபல பதிப்பகமான மதி நிலையத்தால், நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. 



புத்தகத்திலிருந்து…

”எல்லா ஊழியர்களுக்கும் திறமை இருக்கு, ! எல்லோரும் மூளையோடத்தான் நிறுவனத்தில் வேலைக்கு சேருவாங்க! ஆனால், நம்ப மேலதிகாரிகள்தான், “நோ நோ! உன் மூளையை வெளிலயே வச்சுட்டு வந்துரு..! எனக்கு உன் கைகள்தான் வேணும்ங்கிற நினைப்பில், தான் சொல்வதை மட்டும் அவர்கள் கேட்டால் போதும்கிற வகையில் பயன்படுத்துவாங்க! அப்ப எப்படி நிறுவனத்துக்கு அந்த அலுவலர் தன் பங்களிப்பைத் தருவார்.? அவர் சிந்தனை பயன்படாமலேயே போயிடும். அதுக்கு பதிலா இப்படி வாசல்லயே எழுதிப்போட்டுடலாம்.
உங்கள் மூளைகளை வாசலிலேயே வைத்துவிட்டு வரவும். இங்கிருந்து வெளியேறும்போது பத்திரமாக எடுத்துச்செல்லலாம்.
விக்னேஷ் சிரித்தான். சிரிப்பை மீறி இன்னொரு உண்மையும் உறைத்தது. அவனும் அதே தவறைத்தான் செய்துகொண்டிருக்கிறான் என்பதுதான் அது!
ஆமாம். விக்னேஷ்..! நல்ல திறமைசாலிகளை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களைப் பயன்படுத்தாமல் இருக்கும் ஆட்கள் தலைவனாகவே இருக்கமுடியாது.
சச்சின் டெண்டுல்கரை ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக கற்பனை செய்து பார்க்கமுடியுமா? அப்படிச் செய்துவிட்டு, அவர் பெர்ஃபார்மென்ஸ் சரியில்லை என்று சொல்வது மிகவும் அநியாயம் இல்லையா?
இதனை இவன் முடிப்பானென்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 
ன்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். யாருக்கு எந்த வேலை செய்யத் திறமை இருக்கோ அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுத்தால்தான் அந்த வேலைல ஜெயிக்கலாம்.
என்றாய்ந்து –ங்கிற வார்த்தைதான் நமக்கு ரொம்ப தேவையானது. யாரு எந்த வேலைக்கு சரியா இருப்பாங்கன்னு ஆய்வு செய்தால்தான் வேலையை பிரிச்சுக்கொடுக்கமுடியும்.
அதுதான் ஒரு தலைவனுக்குரிய மிகவும் தேவையான குணம்..!”


ஆர்வமிருந்தால் வாங்கிப் படிக்கவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.! :)

புத்தகம் பற்றி நண்பர்  கேபிள் சங்கரின் வலைப்பதிவு!

அன்புநிறை திரு.பா.ரா அவர்களுக்கும், மதி நிலையம் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும், மேலும் என்னை ஊக்கப்படுத்திய அத்துனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி!


Why ஜி?

$
0
0







கல்வியை வியாபாரமாக்கியது இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு. ஆனால் சாபத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நகரங்களில், நல்ல பள்ளிகள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் பத்து பள்ளிகளில்தான் தன் குழந்தைகள் சேரவேண்டும் என்று எல்லோரும் போராடுகிறார்கள்.(றோம்.) (றேன்). அந்தப் பள்ளிகள் எந்த அளவுக்கு கல்வியைக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், ஐ.ஐ.டி கனவுடன் வளர்க்கப்பட்டு, அதற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டதாய் நினைத்துக்கொண்டு, அடுத்த தெரு போஸ்ட் ஆபீஸில் மணி ஆர்டர் அனுப்பத்தெரியாதவனாய் வளர்கிறான். அமிஞ்சிக்கரைக்கு ஆட்டோக்காரரிடம் பேரம் பேசி போகத்தெரியாதவனாய் வளர்கிறான். வெண்டைக்காயை தரம்பார்த்து வாங்கத்தெரியாதவனாய், உறவினர்களில், யாரை என்ன சொந்தம் சொல்லி அழைப்பது என்பது தெரியாதவனாய் வளர்கிறான். இதெல்லாம் தேவையே இல்லை. அவன் படிப்பான், பணம் சம்பாதிப்பான். அவன் எதற்கு வெண்டைக்காயை உடைத்துப்பார்க்கவேண்டும் என்று நினைத்தால், அது இன்னும் ஈனம்.! அவன் வீட்டு வேலைக்காரன் வாங்கிவரும் முற்றல் வெண்டைக்காயைக் கூட கண்டுபிடிக்கமுடியாத வெண்டைக்காய் ஆகிவிடுவான் பையன்!

ஆக மொத்தம் அப்படிப்பட்ட வெண்டைக்காய்களை உருவாக்குவதையே சிரமேற்கொண்டு செய்துவரும் நிறைய பள்ளிகளில் , பாரம்பரியம், படிப்பு, கௌரவம் என்று பல பெயர்களை எடுத்துவரும் ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பதற்கு, சாம,தான முறைகளைக் கையாண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பேத, தண்ட முறைகள் இங்கு செல்லாது எனக்கொள்க!

சரி.. விஷயத்துக்கு வருவோம்.

அப்படிப்பட்ட, ரொம்ம்ம்ம்பப் பெரிய பெயரெடுத்த பள்ளியான பத்மா சேஷாத்ரியில் தன் பையனை ஒன்பதாம் வகுப்பில் சேர்ப்பது என்று எனது நெருங்கிய நண்பரும், திரையுலகப் பிரபலமும் ஆன ஒருவர், தீவிர முயற்சியை மேற்கொண்டார். நானும் அவரும் அந்தப்பள்ளியின் தலைமை அலுவலகம் சென்றோம். அங்கு மிகவும் பொறுப்பாக பதில் சொன்னார்கள். ‘கட்டாயம் சீட் கிடைக்காது.’ என்று!

இருந்தாலும் ஏதாவது ஆற்றல்வாய்ந்த சிபாரிசு இருந்தால், கட்டாயம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பாதுகாவல் தெய்வம் சொன்னது. அப்படி யாரிடம் சிபாரிசு வாங்குவது என்று நினைத்தபோது, நம் திரையுலக நண்பருக்கு, அந்தப்பள்ளியின் மிகநெருங்கிய சொந்தமான, வாரிசான ஒரு பிரபலம் நினைவுக்கு வர, அவரை அணுகுவது என்று முடிவெடுத்தோம். அதே நாளன்று , அந்த பிரபலத்தின் ஊழியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

‘இம்புட்டுதானே சார்! நான் அய்யாக்கிட்ட பேசுறேன். உடனே வாங்கிக்குடுத்துருவார். கவலைப்படாதீங்க! என்றார்.

அன்று இரவே தொலைபேசினார்.

‘சார்! அய்யா உங்க பையனுக்கு சீட்டு வாங்கித்தர ஒத்துக்கிட்டாங்க!

’ரொம்ப நன்றிங்க!’

பரவாயில்ல சார்!..மத்தவங்ககிட்ட ஒரு லட்சம் வாங்குவாரு! நீங்க 75000 தந்தா போதும்னுட்டாரு!

‘திக்’ என்றது எங்களுக்கு! இருந்தாலும், பையனை அந்தப்பள்ளியில் சேர்த்துவிடும் மோகமும், வேகமும் – சிந்திக்கவிடாததால், ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். இதைத்தவிர பள்ளியின் ஃபீஸ் வேறு கட்டவேண்டும்.


அடுத்த நாள் காலையே அந்த ஊழியரின் உதவியுடன், பிரபலத்தின் வீட்டலுவலகத்துக்குச் சென்று அவரது மேனேஜரைச் சந்தித்து, சீட் வாங்கித்தருவதற்கு முன்னரே 75000 கொடுத்தாயிற்று. (இதைவிட, எனக்கு சீட் வாங்கிக்கொடுத்த ஆட்டோக்காரர் நியாயவான்! அவர் வேலை முடிந்தபின்தான் பணம் வாங்கிக்கொண்டார்! )அப்போது மேனேஜரிடம்..

‘எப்ப சார் சீட் கிடைக்கும்?’

அதை நான் சார்க்கிட்ட கேட்டுத்தான் சொல்லமுடியும்! நீங்க அப்ளிக்கேஷன் வாங்கி, பையனை என்ட்ரன்ஸ் எழுதச்சொல்லுங்க! என்று நிதானமாகச் சொல்லிவிட்டு பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு அய்யாவைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

உடனே பையனுக்கு, அப்ளிக்கேஷன் வாங்கி, நுழைவுத்தேர்வும் எழுதினான். நமக்குத்தான் கட்டாயம் சீட் கிடைக்கப்போகிறதே என்ற நம்பிக்கையில், அவன் படிக்கவே இல்லை. 

ஆகவே நுழைவுத்தேர்வு அவுட்..!!

அப்புறம்தான் தெரியவந்தது இந்தத்துறையின் மற்றும் அந்தத் தொரையின் கோரமுகம்.!

நுழைவுத்தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டான் என்று நண்பர் அந்த மேனேஜரிடம் போய்ச் சொல்ல, ‘ஓ! அப்படியா? அப்ப ஒண்ணும் செய்யமுடியாது! சீட் இல்லை.! கிளம்புங்க! என்று சாவதானமாக பதில் கொடுக்கிறார்.

அடுத்த திக் ஆரம்பித்துவிட்டது.

’அப்ப, நாங்க கொடுத்த 75000 பணம்?’

’அது எப்படி திருப்பிக் கொடுப்பாங்க? நாந்தான் முன்னாடியே சொன்னேனே… எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினாத்தான் சீட்டு வாங்கித்தரமுடியும். அப்படி எக்ஸாம் ஃபெயில் ஆகிட்டா பைசா திரும்பத்தரமுடியாதுன்னு…’

நண்பர் கத்த ஆரம்பித்துவிட்டார்.

‘நானும் சினிமாத்துறைலதான் இருக்கேன். என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? சீட்டே வாங்கித்தரலை…என் பணத்தை கொள்ளையடிக்கப்பாக்குறீங்களா? பிரஸ்மீட் போட்டு நாற அடிச்சுருவேன்’ என்று சொல்லவும்..

மீண்டும் மேனேஜர் அய்யாவைப் பார்க்கச் செல்கிறார். திரும்ப வந்து,

’யாருக்கும் அப்படி பணத்தை திருப்பித்தர்றதில்லை. இருந்தாலும் நீங்க சொன்னதால், உங்க பையனுக்காக போன் செஞ்சதுக்காக மட்டும், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கழிச்சுக்கிட்டு மிச்சத்தை வியாழக்கிழமை வந்து வாங்கிக்குங்க!’ என்கிறார்.

அதேபோல் வியாழக்கிழமை மீண்டும் போய் நின்றால், ’அய்யா ரொம்ப டென்ஷனாயிட்டாரு! நான் சமாதானப்படுத்தி வாங்கித்தந்திருக்கேன். இந்தாங்க என்று அவர் கொடுத்த தொகை 69000.’

’ஏன்? பாக்கி என்னாச்சு?’ என்று கேட்டால்..

’சும்மா போங்க.. அதான் போனதடவையே சொன்னேனே? போன் பண்ணினதுக்கு காசு எடுத்துக்குவோம்னு!’

’அடப்பாவிகளா? எந்த நெட்வொர்க்குலடா ஒரு போன் பண்ணினா 6000 ரூபாய் பில் வருது?’
ஆக மொத்தத்தில்..

எந்த வேலையும் ஆகாமல், அந்த பள்ளியின்மீது ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக ஆறாயிரம் ரூபாயை இழந்துவிட்டு நின்றார் நண்பர்!

ஒரு பிரபலமான பள்ளியின் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, செய்யாத வேலைக்கும் சம்பாதிக்க நினைக்கும் இவர்களெல்லாம் இந்த சமூகத்தை என்ன நிமிர்த்திவிடப்போகிறார்கள்?

மேலும், அந்தப்பள்ளிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதே?

இப்படியெல்லாம் சம்பாதித்துதான் வாழ்க்கை நடத்துகிறீர்களா?

உங்கள் குடும்பப்பள்ளி என்று ஊருக்கே தெரியும். அதில் சீட் வாங்கித்தர நீங்களே பணம் வாங்குகிறீர்கள் என்றால் அது எந்தவிதமான நிர்வாகம்?

கல்வியை வியாபாரமாக்கி, அதில் மக்களை அடிமட்ட நுகர்வோராக்கும் இந்தக் கலாச்சாரத்துக்கு துணை போகும் நீங்கள் எப்படி சமூகத்துக்கு நல்லது செய்துவிடமுடியும்?

இதுபோல் எத்தனை ஆறாயிரம் ரூபாய்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?




Why ஜி?



பில்லா 2 – முதல் காட்சி!

$
0
0




திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன்.
ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J
முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘தல’ என்று கத்திக்கொண்டு திரையை நோக்கி ஓட எத்தனித்தான்) முட்டி போட்டுக்கொண்டு கத்துகிறார். கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் நான்குபேரிடம் , கத்திவிட்டு அவர்களைத் துவம்சம் செய்கிறார். அதில் ஒருவனை நோக்கி துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். திரை உடைகிறது… பெயர்கள்…!
பெயர் போடும்போதே கதை ஆரம்பித்துவிடுகிறது… இலங்கையில் ஒரு குடும்பம்..அதில் ஒரு சிறுவனும், சிறுமியும்… அந்தக்குடும்பம் எப்படி பிரிகிறது. சிறுவன் எப்படி வளர்கிறான். என்னன்ன சிறு குற்றங்கள் செய்கிறான் என்று புகைப்படமாக விரிகிறது.
இலங்கை அகதியாக இந்தியா வந்து சேரும் டேவிட் பில்லா… முகாமில் தவறு செய்யும் போலீஸ் அதிகாரியைத் தட்டிக்கேட்பதில் ஆரம்பித்து, வைர வியாபாரம் செய்யும் சைவ ஹோட்டல் முதலாளியிடம் சேர்ந்து, தொழிலை விருத்தி செய்ய போதைப்பொருள் வியாபாரத்துக்காக, அங்கிருந்து கோவா அப்பாஸியிடம் சென்று, ஜார்ஜியாவில் இருக்கும் இன்னொரு ஆயுத வியாபாரி டிமிட்ரியைப் பகைத்துக்கொண்டு, அப்பாஸியைத் தீர்த்துக்கட்டி, தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தன்னைக்காத்துக்கொண்டு, மிகப்பெரிய டானாக ஆவதுதான் கதை!
இதற்கிடையில் பில்லாவின் அக்கா சென்னையில் இருப்பதும், அவரது மகள் பில்லாவை ரசிப்பதும், பில்லா அவளை தன் பாதுகாப்பில் வைத்திருப்பதும், அவளை எதிரிகள் கொல்வதும் தனி!
அப்பாஸியின் ஆளை, பில்லா கரெக்ட் செய்து வைத்திருந்து, அவள் இன்னொருவனிடம் கரெக்ட் ஆகியிருப்பது அடுத்த தனி!

அஜீத்..அஜீத்…அஜீத்…!! இந்த ஒரு தனிமனிதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் வெறிபிடித்து ஆராதிக்கிறார்கள் என்றால் , அதற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கையும், எந்த ஒரு திரையுலகப் பின்னணியும் இல்லாமல் முன் இடத்தைப் பிடித்ததுமாகத்தான் இருக்கும். அவரது குரல் கேட்கும்போதெல்லாம், தியேட்டர் அலறுகிறது..!! அவர் எது செய்தாலும் ஆர்ப்பரிக்கிறது. அதனாலோ என்னவோ, நமக்கும் அஜீத்தைப் பிடிக்கிறது.
படம் முழுமையும் அஜீத் ஆக்கிரமிக்கிறார். அனேகமாக அவர் இல்லாத காட்சிகளை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அவர் பேசும் வசனங்களை ஒரு A4 காகிதத்தில் எழுதிவிடலாம். (அப்படியும், மீதம் இடம் இருக்கும் என்பது தனிச்செய்தி!) அனேகமாக திரு.இரா.முருகன், ஒரு வாரத்தில் மொத்த வசனத்தையும் எழுதிக் கொடுத்திருப்பார்.
கதாநாயகிகள் என்று யாருமில்லை…!! இருவருமே டுபாக்கூர்தான்…!! அதுவும் புருனா அப்துல்லாவுக்கு பதிலாக.. நமது புருனோவும் , அப்துல்லாவும் நடித்திருந்தாலாவது சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..!
காமெடி! – பில்லா போன்ற ஒரு சீரியஸ்ஸ்ஸ்ஸான கதையில் எதிர்பார்ப்பதுதான் காமெடி! என்று இயக்குநர் சிரிக்காமல் சிந்தித்திருப்பார் போல..! எல்லோரும் சிரிக்க அவகாசமில்லாமல், பெரிய கடுப்புடனேயே அலைகிறார்கள்.  அட..நம்ம ரேணிகுண்டா காமெடியன் கூட , வில்லனாகத்தான் நடந்துகொள்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உழைத்திருக்கிறார். வினாடிக்கு வினாடி பின்னியிருக்கிறார். ஆங்கிலப்படத்துக்கு இணையான ஒளியமைப்புகளும், நிறச் சேர்க்கையும் பார்க்க பிரம்மாண்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
இசை..யுவன் சங்கர் ராஜாவாம்..!! ஏதோ மூட் அவுட்டில் இருந்திருப்பார் போல! ‘பில்லா -1’ன்  ஹார்ட் டிஸ்கை நேராக இதில் கனெக்ட் செய்து……….
மிகவும் சுயநலமான ஒரு தனி மனிதன் எவ்வளவு தவறுகளை வேண்டுமானாலும் செய்வான் என்று சொல்லப்படுகிறது. இப்போது ஹீரோ, நல்லவனாக இருந்தே ஆகவேண்டும் என்ற நியதி உடைக்கப்பட்டிருப்பதால், ‘மங்காத்தா’ பாணி இதிலும் கையாளப்பட்டிருக்கிறது. நடிப்பது அஜீத் என்பதால் அவர் பாத்திரத்தை ஹீரோ என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால், பில்லான்னு ஒருத்தன் இருந்தான்..அவன் என்னன்ன செஞ்சான்னா..என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளலாம்.
பில்லாவின் நோக்கமோ, அவன் இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்பவனாக ஆவதற்கான பின்புலமோ, சொல்லப்படவே இல்லை.! அதுவும்..ஒரு இலங்கை அகதி, இந்தியாவில் வந்து, இவ்வளவு பெரிய டானாக ஆகிறான் என்று சொல்வது இலங்கைத்தமிழர்களை இன்னும் கவலைக்குரியதாக ஆக்கும் என்றும் இயக்குநர் சிந்திக்கவில்லை. சரி..! அப்படி ஆகிறான் என்றால் அவனுக்கு யார் எதிரி என்பதும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவு போலீஸ்களைக் கொன்ற இந்த அகதிகளை அப்படியே சும்மா விட்டுவிட்டார்களா? பெரிய வில்லனாகக் கருதப்படும் டிமிட்ரியின் ஆயுதக்கிடங்கையும் நாசம் செய்துவிட்டால், எங்கு போய் அவர் ஆயுதம் செய்து டானாவது…? இப்படியெல்லாம் கேள்வியெழாமல் இருந்தால், இரசித்துப் பார்க்கலாம்.
அஜீத் ஒருவர் கிடைத்துவிட்டார். பில்லா என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஸ்டைலிஷான மேக்கிங்கில் பின்னிவிடலாம் என்று விளையாடியிருக்கிறார்கள்.  மற்றபடி திரைக்கதையில் கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம். Super Grey finishing ல் முழுப்படத்தையும் காட்டுவதால், நாம் கதையைப் பற்றி சிந்திக்கமாட்டோம் என்று நினைத்திருப்பார்கள்
. பாவம் அஜீத் இரசிகர்கள்.! இரண்டாம் பாதிக்குப் பின் பெரிய சத்தமே காணவில்லை. அமைதியாகப் படம் பார்த்தார்கள். படம் முடிந்தபின்னரே ஒரு பெரிய ஆரவாரம் வந்தது. ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை, ஹிந்தி சர்தார்..போன்ற படங்களைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்துக்காக ஜார்ஜியா லொக்கேஷன்களை ஒருங்கிணைத்தபோது நானும் அருகில் இருந்தேன். அந்த நாட்டில், இராணுவமே படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டர் தந்து உதவியது. இப்படி ஒரு லொக்கேஷன் இருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்தியது ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாதான்! அந்தப்பகுதிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால் லொக்கேஷன் மட்டுமே கதை இல்லையே?
மொத்தத்தில்…என்னைப் பொறுத்தவரை..
யாரோ பில்லா செய்யும் அத்துனை செயல்களையும், அவன் போக்கிலேயே பார்க்கத் தயார் என்றால்..ஒன்றும் பிரச்னை இல்லை!
இல்லை..எனக்கு கதை சொல்லணும்.. அந்தக்கதையில் ஒரு பிரச்னை இருக்கணும். அதை கதாநாயகன் எப்படி தீர்க்கப்போறானோன்னு தோணனும். அதைத்தீர்க்கும்போது வரும் தடைகளை எப்படி எதிர்கொள்றான்னு இருக்கணும். அப்புறம் வெற்றிகரமா இந்த பிரச்னைலேருந்து அவன் வெளில வந்தான்னு இருக்கணும் என்று திரைக்கதை ரீதியாகச் சிந்தித்தால்…. வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
நான் எப்போதும், எனக்கு நல்லது என்று தோன்றும் படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். தவறாகத் தெரிந்தால், கனியிருப்பக் காய் ஏன் கவர்வானேன் என்று எழுதவே மாட்டேன்…
எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்த படத்தை 650 வார்த்தைகளில் குறை சொல்லக்கூடாதுதான்..! ஆனால், அந்த உழைப்புக்கு நேர்மை என்பது, நம்பி வரும் இரசிகனை திருப்திப்படுத்துவதுதானே? மேலும்.. நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

பில்லா – 68 கோடி இருந்தால் படமெடுக்கலாம். 120 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். J




நிட்டாலே புத்தி சொன்னார்..

$
0
0

     


எழுதி வைத்திருக்கும் கதையையோ, சில நிகழ்வுகளையோ, படித்த புத்தகத்தையோ பதிவாக்கலாம் என்றுதான் நானும் நினைப்பேன். ஆனால், அவற்றை முந்திக்கொண்டு இந்த விஷயங்கள் முன்னிலை பெறுகின்றன. ஏன் இதையே எழுத நினைக்கிறாய்? என்றபோது மனசாட்சி ஒரு நியாய தர்க்கத்தை எடுத்துவைத்தது. மற்றவை எல்லாம் ஒரு பகிர்தல்தான். ஆனால் இதை எழுதினால் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். ஆகவே இதையே எழுது…! உன்னையும்(!) நம்பி படிக்க வருபவர்களுக்கு ஒரு நியாயம் செய் என்றது. அது எனக்கும் சரியாகப் பட்டது. 

ஆகவே…

கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.


Dear All,


I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a single class until May 15. I decided to quit after asking for a class for multiple times and everytime I get the same response saying it'll be scheduled from next week (And it never was). So, I quit (saying that my brother is getting maried and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May, they say like the refund will be processed by the month end and initially they said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said the old employees were transferred and a new guy has taken care. He said that the refund has been processed and I'll get the money today (29th June). When I called today, they said the same story - month end process and you'll get that by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly belive that the money will be ready by July 4 or 6 - they'll have another excuse for that anyway. Can someone help me getting this process a little faster? I tried sending a feedback via the NIIT site, but after submitting the feedback, "The page cannot be displayed" Error comes up! My Student ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.



NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை.இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்கவிரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.

நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,

‘எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம் என்றார்.

நான் உடனே..

ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க! என்றேன்.

இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே… என்றார்.

நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க! என்றேன்.

அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார் என்று மீண்டும் சொன்னார்.

நான் ஆரம்பித்தேன்.
பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா? என்றேன்.

என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ் என்றார். 

அப்போ, என் ஐ ஐ டிக்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.

நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார் என்றார்.

பிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம் என்றேன்.

நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார். 
‘சார்! நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி என்றார்.

நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

கேட்டால் கிடைக்கும்.!



இந்த விளம்பரத்துக்கு இன்னொரு முகம் இருக்கு போல! :) ஆமா.. ஒரு அட்மிஷன். இரட்டை வருமானம்..!! 




இன்னொரு NIIT நகைச்சுவை! ( இணையம் தெளித்த படங்களில் ஒன்று! )


காமெடி கார்னர்

சிதம்பரத்துக்கு வந்த சோதனை...!! :)



தலைவா, வா! - விமர்சனம்

$
0
0




    தலைவா, வா! என்கிற தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக் கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.

    மதி நிலையம் பதிப்பித்துள்ள இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.

   'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல!

   நாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல!

   நாம் கேட்பது சில பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து மனதில் ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.!

சில புத்தகங்களை படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி) 
சில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(பொன்னியின் செல்வன் போல, மிஸ்டர் வேதாந்தம் போல )
சில புத்தகங்களை ரசித்துப் படித்து மகிழலாம் (வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதை நூல் போல)
சில புத்தகங்களில் மெய் மறந்து போகலாம். ( பாலகுமாரன் நூல்கள்)
சில புத்தகங்கள் நம்மை ஆச்சர்யத்தில் வீழ்த்தும். (தலைமைச் செயலகம் – சுஜாதா)

சில புத்தகங்கள் படித்து குறிப்புகளாக நாம் பயன்படுத்தலாம். (லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.)

ஆனால்.. தலைவா,வா! எனும் இந்தப் புத்தகம்
-படித்து ரசிக்கவோ,
படித்து பாதுகாக்கவோ,
படித்து மகிழவோ,
படித்து மெய்சிலிர்க்கவோ,
படித்து முடித்து தூக்கி வைத்துவிடவோ
படித்து முடித்து ஆச்சர்யப்படவோ
அல்ல.!


இது-
படித்து
மீண்டும் படித்து,
புரிந்து தெளிந்து,
புரிந்து கொண்டதை பயிற்சி செய்து,
பயிற்சி செய்து பயனடைந்து,
பயனடைந்த ஆனந்தத்தில் பிறருக்கு பரிந்துரைக்கவும்
படித்துப் புரிந்து பயனடைந்து பின் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளவும்
பிறருக்கு வாங்கிப் பரிசளிக்கவும்
அவ்வப்போது எடுத்துப் பார்த்து தெளிவு (Clarify) செய்துகொள்ளவும் (Confirm)
இந்நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக யுக்திகளைப் பின்பற்றி பயன்பெறவும் (Confirm , Adapt & Apply) வழிகாட்டுகிற ஒரு ‘வாழ்க்கைக் கையேடு’ எனலாம். (குறிப்பாக பன்னாட்டு சிந்தனைகளை இந்நாட்டு வழியில் எடுத்துச் சொல்கிறது)


   விக்னேஷோடு (இந்த நூலில் வரும் கதாநாயகன் 1) படிப்பவரும், சந்திரமௌலி சாரிடம் (கதாநாயகன் 2) குருப்பயிற்சியில் இணைகிறார்கள் என்பதுதான் படிப்பவர் உணராத உண்மை.
குருப்பயிற்சி முடிந்தவுடன் விக்னேஷ் மட்டுமல்ல.. அவனோடு (இந்நூலில்) சேர்ந்து சக பணியாளர்களும் குருப்பெயர்ச்சியால் அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்கள். உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், இப்புத்தகம் படிப்பவரும் தலைமைப் பண்புகள் மேம்பட்டு ‘குருப்பயிற்சியும், குருப்பெயர்ச்சியும்’ அடைகிறார்கள்.

   One on One Coaching பற்றிய இந்த புத்தகம் படிப்பவரும் Just For Rs.80/-க்கு ‘ Mentoring & Coaching’  பயிற்சியை சான்றிதழின்றி செய்து முடிக்கிறார்கள் என்பது மிகையல்ல!

   இந்த புத்தகம் படிக்கும்போது நண்பர் சுரேகாவின் நூல் இது என்ற உணர்வு மாறி ‘ அட! சுரேகா, எவ்வளவு அழகாக, தெளிவாக, சுலபமாக நிர்வாக யுக்திகளை, கோட்பாடுகளை, செயல்திட்டங்களை முன் வைக்கிறார். GREAT!  என்று இந்த அட்டைப்பட காலி நாற்காலியில் அவரை உட்கார வைத்து ‘Thank you my coach’ என்று சொல்லவைத்துவிட்டது.

  Friendly வாத்தியார் சுரேகாவிற்கு சுற்றிப்போடவேண்டும். ! அறிவு தானமிட்டவர்!

   நூல்களுக்கு ஒரு சாபம் உண்டு! அதன் விலை என்பது Paper & Printing Cost in terms of ‘FORMS’ or No. of Pages என்பதுதான் அது! உண்மையில் உள்ளே உள்ள Contents minimum விலை ரூ.8000/- (Minimum) மதிப்புள்ளது. அந்த விஷயங்களைப் படித்து புரிந்து, பயன்பாடாக மாற்றினால் நாம் பெறும் மதிப்பு ரூ.80,000 to 80 லட்சம்.!  உண்மை…! வெறும் புகழ்ச்சி அல்ல!

   அரிதாக வெளிவரும் இத்தகைய புத்தகங்கள் குறைந்தபட்சம் லட்சம் பிரதிகளை விற்பனையில் எட்டவேண்டும். ஒரு ஆயிரம் பேராவது வெற்றியாளராக மாறவேண்டும். Thank you Surekaa Sir ! வயதில் மூத்தவன் என்பதால் வாழ்த்துகிறேன். வாழ்க!

   இந்த நூல் பற்றி..இது என் மதிப்புரை.. வாழ்த்துரை..புகழுரை..அல்ல! பயன்பாடு அடைந்த ஒருவரின் நெஞ்சார்ந்த நன்றியுரை..!

பணிவன்புடன்
பால சாண்டில்யன்




டாக்டர். பாலசாண்டில்யன் M.S. M.S. Ph.D
Thought Leader / Transformation Coach / Consultant / Psychologist
CEO – Vision Unlimited – www.visionunlimited.in







இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !

$
0
0


சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:



   கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அவர்களிடம் சரியான பதிலில்லை. தனக்கு நேரமாகிவிட்டது என்று உடனே ஒரு டாக்ஸி பிடித்து 6000 ரூபாய் கொடுத்து சென்னை வந்து சேர்கிறார்.

அவர் அமெரிக்கா சென்றபின் , இதை எனக்கு ஜூலை 4 அன்று மின்னஞ்சல் அனுப்புகிறார்.

நானும், அவரிடம் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொண்டு, ரெட்பஸ்ஸின்  support@redbus.in  க்கு ஒரு மின்னஞ்சல் ஜூலை  5ல்  அனுப்பினேன்.

முழு விபரத்தையும், சுருக்கமாகச் சொல்லி, தவறான தகவலுடன் டிக்கெட் புக் செய்தது உங்கள் தவறு.! அவரது பயணச்செலவுக்கு நீங்கள்தான் பொறுப்பு.! இந்த விஷயத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில்… ரெட்பஸ்ஸுக்கு எதிராக சுமார் 1500 மின்னஞ்சல்கள் ஒரே நாளில் வரும் என்றும்.. இது சம்பந்தமாக சட்டப்படி அணுகுவதற்குமுன் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று ஒரு நுகர்வோரின் சார்பாகவும், ஒரு குழுமத்தின் நிர்வாகியாகவும் எழுதியிருந்தேன்.

ஜூலை  10 ம்தேதி அன்று ரெட்பஸ்ஸின் Alok Goel - Chief Product Officer,சண்முகம் அவர்கள் செலவழித்த தொகை அனைத்தையும் திரும்பத்தருவதாகச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார். அதாவது ரூபாய் 6000 +700 = 6700.

கேட்டால் கிடைக்கும் என்று போராடியதால்தான் சாதிக்க முடிந்தது என்று சண்முகம் மிகவும் மகிழ்ச்சிப்பெருக்குடன் நன்றி சொல்லி மின்னஞ்சலிட்டார்.

முடிந்தது.

அடுத்து..


மயில்சாமி அவர்கள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை வர அபி&அபி ட்ராவல்ஸ் பஸ்ஸுக்காக, MAKEMYTRIP.COMல் நான்கு டிக்கெட்கள் புக் செய்திருக்கிறார். அவர்களுக்கான பஸ்ஸில் ஏறும்போதுதான் தெரியவருகிறது. அவர்களது சீட்டில் வேறு சிலர் அமர்ந்திருப்பது…! அதை அபி & அபியிடம்  கேட்டபோது, ‘இந்தப்பயணிகள்தான் எங்களிடம் புக் செய்தவர்கள்’ நீங்கள் வைத்திருக்கும் டிக்கெட் எங்கள் டேட்டாபேஸில் ஆகஸ்ட் 22ம் தேதிக்கானது. நீங்கள் சொல்லும் MAKEMYTRIP.COMக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இந்தப் பிரச்னை இவர்கள் 4 பேருக்கு மட்டுமல்ல. இதேபோல் 15 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இரக்கப்பட்டு, அபி&அபி மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு சிறப்பு(!) பேருந்தை சென்னைக்கு இயக்கியிருக்கிறார்கள். மிச்ச டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் சென்று நிரப்பிய கதை தனி! ஆக.. மிகவும் போராடி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். மேலும், மேக் மை ட்ரிப்பை அணுகி பேசியபோது சரியான பதில் சொல்ல ஆள் இல்லை. அல்லது இதோ அதோ என்று இழுத்திருக்கிறார்கள். பின்னர் ஆகஸ்டு 18 அன்று என்னிடம் பேசினார்.
இது முழுக்க முழுக்க MAKE MY TRIP ன் தவறுதான். அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்றேன். மேக் மை ட்ரிப்புக்கும் தனக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை என்று அபி& அபியிடம் ஒரு மின்னஞ்சலும் வாங்கியாயிற்று.!
அதன்படி அந்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்து,  அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப, நானும் ஆகஸ்டு 21ம் தேதி காலையில் busservice@makemytrip.comக்கு எப்பவும்போல, விளக்கம்சொல்லி, நுகர்வோரின் பலம் சொல்லி, மேக் மை ட்ரிப்புக்கு எதிராக ஆன்லைனில் போராட்டம் நடத்தப்படும் என்று லைட்ட்ட்டாக மிரட்டி, .ஒரு மின்னஞ்சல் அனுப்ப..

அடுத்த நாளே மயில்சாமி போன் செய்தார்.

”தேங்க்யூ சுரேகா! மேக் மை ட்ரிப்பிலிருந்து எங்கள் டிக்கட் பணத்தை திரும்பத் தருவதாக மெயில் வந்திருக்கிறது.” என்றார்.

இதுவும் முடிந்தது.


     
       நானும், கேபிளும் எதேச்சையாக செய்யும் விஷயத்தை எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதை நினைக்கும்போது பெருமையாய் இருக்கிறது.

   நமது தனிமனித தட்டிக்கேட்கும் குணம் குறைந்து போயிருப்பதால்தான் இதுபோன்ற அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்று நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

  எங்கள் ஊரில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் இருக்கிறது 1 லட்சம் பேர் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அது பெருமை இல்லை. 1 லட்சம் பேர் பட்டினியாக இருந்திருக்கிறார்கள் என்றும் அர்த்தப்படும். எனினும்..

  தொடர்ந்து போராடுவோம். நம் ஊரின் சாக்கடை நாற்றத்துக்கு செண்ட் அடிக்கமுடியாது. இறங்கித்தான் அள்ளவேண்டும்.

கை கோர்ப்பவர்களுக்கு மீண்டும் நன்றி!


வலைப்பதிவர் திருவிழா

$
0
0

சந்திப்போம் வாருங்கள்!








வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1

$
0
0



சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்  (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..) என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.

     பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது.

ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார்
ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார்.
சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார்.
ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார்.
ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு ஒளிப்பதிவாளர் , இயல்பாக எல்லோரிடமும் பழகி, மேடையை அலங்கரிக்கிறார்.
ஒரு பதிப்பாளர், விளம்பரப்பட இயக்குநர், எழுத்தாளர் ஆகியோர் மிகச் சாதரணர்களாக அரங்கில் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு புத்தக விற்பனையாளர் நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு மருத்துவர் சிறப்பாகக் கவிதை பாடுகிறார்.
ஒரு மனிதவளப் பயிற்சியாளர் நிகழ்ச்சியைத் தொகுக்கிறார்.
ஒரு மூத்த கணக்காளர், கவிதை வாசிக்கிறார்.
ஒரு புகைப்படக்கலைஞர் புன்னகையுடன் உபசரிக்கிறார்.
ஒரு உணவக நிறுவனர் உணவு ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மேலாண் அதிகாரி இருக்கை எடுத்துப்போடுகிறார்.
ஒரு மென்பொருள் வித்தகர் உணவு பரிமாறுகிறார்.
ஒரு கல்லூரிப்பேராசிரியை கவிதை வழங்குகிறார்.
ஒரு கதைசொல்லும் பாட்டி பாராட்டுப்பெறுகிறார்.
ஒரு முதுபெரும் எழுத்தாளர் கௌரவிக்கப்படுகிறார்.
ஒரு போக்குவரத்து நிறுவன நிர்வாகி நன்றி கூறுகிறார்.

     இது, ஒரு ஒற்றுமையான குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும். அப்பா,அண்ணன், தம்பிகள், மாமன்,மச்சான் என்று வெவ்வேறு பதவிகளில் இருந்தாலும் ஈகோ துறந்து, அனைவரும் இறங்கி வேலைபார்ப்பார்கள். அதுவும் இப்போது மறைந்துவிட்டது. அனைத்தையும் ஒரு கேட்டரிங் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு ஜாலியாக வந்துசெல்கிறார்கள். ஆனால், இந்தப்பதிவர் சந்திப்புத் திருவிழா மிகவும் நேர்த்தியாக, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தன் பங்களிப்பை கொஞ்சம்கூட ஈகோ இன்றி தந்ததுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

சரி.. எல்லோரும் ஒன்று கூடிவிட்டோம். நன்றாக விழா நடத்திவிட்டோம். எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டோம். மீண்டும் அடுத்த ஆண்டும் விழா நடத்துவோம். அதிலும் கவிதைகளை அரங்கேற்றுவோம். அற்புதமாகக் கொண்டாடுவோம். எல்லாம் சரிதான்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சொன்னதுபோல், பதிவூடகம் மட்டுமன்றி இன்னும் பல ஊடகங்கள் நம்மைப் பார்த்துக்கொண்டுள்ளார்கள். நம் போக்கு எப்படி இருக்கிறது என்று நாடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமன்றி, இந்தச் சமூகத்துக்கோ, குறைந்தபட்சம் நமக்கோ என்ன செய்யப்போகிறோம்? செய்துகொள்ளப்போகிறோம்.?

     நாம் அனைவரும் குறைந்தபட்ச அறிமுகம் ஆகியிருக்கிறோம். என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்று எல்லோரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கிறோம். எழுதும் கருத்தை வைத்து, ஆட்களை நாமே கற்பனை செய்துவிட்டு, எதிரில் பார்த்தவுடன், வியந்திருக்கிறோம். ஏமாந்திருக்கிறோம். சிரித்திருக்கிறோம். ( எடுத்துக்காட்டு – சேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு மெர்சலாகியவர்கள் . சேட்டை நாஞ்சில் வேணு அண்ணனை நான் கற்பனையே செய்துவைக்காததால், அவரை அப்படியே ரசித்தேன்)

     இவையெல்லாம் மீறி, இந்த அறிமுகங்களும், இந்தக் குழு நடவடிக்கைகளும் என்ன செய்யப்போகிறது? என்று கொஞ்சம் யோசிப்பது அவசியம் என்று எண்ணுகிறேன். ஏனெனில், பதிவர் சமூகம் மட்டும்தான், வெவ்வேறு தளத்தில், வேலையிலும், திறமையிலும் பல நிலைகளில் உள்ளவர்கள் வலைப்பூ என்ற ஒற்றை ரசனையில் ஒன்றுபட்டு, நட்புகளாய், உறவுகளாய் மாறி நின்று, ஒரு வலிமையான அமைப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது.


 இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?

     அலசுவோம் வாருங்கள்….           (தொடரும்)





நிகழ்வைப்பற்றி நிறைய பேர் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
அவைகளில் சில...


http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html

http://www.valaimanai.in/2012/08/blog-post.html

http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html

http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html

                  


முகமூடி.. – பாத்துட்டோம்ல..!

$
0
0





மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..!

12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள்.

போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன்.

வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!

 எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன்.

போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன்.

நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன்.

அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என்ற கூற்றை இரசித்தேன்.

அன்புநிறை மனிதரும், அதீத நூலறிவும் கொண்டவரான சச்சிதானந்தம் அய்யாவை இரசித்தேன்.

பன்னீர்சோடா குடிக்குமிடத்தில் இருந்த ட்யூட்களை இரசித்தேன்.

குங்ஃபூ பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்ற பொதுமையை இரசித்தேன்.

இடைவேளையில் வந்திருந்தவர்களை இரசித்தேன்.  


இடைவேளை வரை சூப்பர் என்று டிவிட்டினேன். அதை முகப்புத்தகத்தில் லைக்கியவர்களை இரசித்தேன்.


என் அருகில் அமர்ந்திருந்தவர் ஆண்ட்ராய்டில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடியதை இரசித்தேன்.

ஒரு சண்டைக்காட்சியில்… செல்வாதான் சூர்யா… நரேந்தான் டாங் லீ என்று மக்கள் ஏழாம் அறிவை இன்னும் நினைவூட்டியதை இரசித்தேன்.

எனக்கு பின்பக்கம் இருந்த ஜோடி முகமூடியே இல்லாமல் இருந்ததை இரசித்தேன். ( அந்தப்பையன் எனக்குத் தெரிந்தவரின் மகன் என்பதையும் சேர்த்து..)

இடைவேளைக்குப்பிறகு ஏ.சியில் வந்த தூக்கத்தையும் இரசித்தேன்.

படம் முடிந்து வெளியில் வந்தேன். ‘நான்’ திரைப்படம் ஃபுல் என்றார்கள். மிகவும் இரசித்தேன்.




பதிவுலகில் இதுபோன்று முகமூடி அணிந்துகொண்டிருந்துவிட்டு, இப்போதுதான் முகத்தைக் காட்டியிருப்பவர் ‘ சேட்டைக்காரன் அண்ணன் அவர்கள்.

அவர் பதிவர் சந்திப்பில் பேசும்போது. நான் தமிழ் இலக்கியத்துக்கு சேவை செய்கிறேன். ஏனெனில் நான் கவிதை எழுதுவதில்லை என்று சொன்னதை இரசித்தேன்.

அவருக்குக் கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து, முகமூடி என்பது முக்கியமில்லை. நாம் அதைப்போட்டுக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்தேன்

இப்போதும் பதிவுலகில் முகமூடியோடு திரியும் வவ்வால் வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
.
முகமூடி படத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை..நான் இரசித்தவைகளை மட்டுமே கூறியிருக்கிறேன். மிஷ்கினுக்கும் திரை சறுக்கும் அவ்வளவுதான்...ஆனால் மிஷ்கின் திறமைசாலிதான்!

Viewing all 180 articles
Browse latest View live